இந்தியா

மேற்கு ஆசிய போருக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு ஆசியப் போரால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளதால், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தி உள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பேசி​ய​தாவது: உலகம் முற்​றி​லு​மாக மாறிக் கொண்​டிருக்​கிறது. குளோபல் சவுத் நாடு​களின் வலிமை அதி​கரித்து வரு​கிறது.

பன்​முகத்​தன்மை கொண்ட உலகம் உரு​வாவதை யாராலும் தடுக்க முடி​யாது. ஓர் உண்​மை​யான, நேர்​மை​யான சக்​தி​யாக பிரிக்ஸ் உரு​வெடுத்​து, ஒட்​டுமொத்த மனித குலத்​தின் நன்​மைக்​காக பாடு​பட்டு வரு​கிறது.

உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவதில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். பனிப்போர் மனநிலையைக் கைவிட வேண்டும். மேற்கு ஆசிய போரால் அந்த பிராந்​திய மக்​கள் பெரும் பாதிப்​பு​களைச் சந்​தித்து வரு​கின்​றனர். இந்​தப் போரால் ஒட்​டுமொத்த உலக​மும் பாதிக்​கப்​படு​கிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்​டும். இவ்வாறு அவர் தெரி​வித்​தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசும்​போது, “பிரிக்ஸ் கூட்​டமைப்பு எந்​தவொரு நாட்​டுக்​கும் எதிரி கிடை​யாது. அனை​வரை​யும் அரவணைத்​துச் செல்​லவே பிரிக்ஸ் விரும்​பு​கிறது" என்று தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT