இந்தியா

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: சத்தீஸ்கர் அரசு தீர்மானம்

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்​கும் சட்ட திருத்​தத்தை உடனே அமல்​படுத்த சத்​தீஸ்​கர் சட்​டப்​பேர​வை​யில் மாநில முதல்​வர் விஷ்ணு தியோ சாய் தீர்​மானம் தாக்​கல் செய்தார்.

பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோதா மற்​றும் தொகுதி மறு​வரையறை மசோதா மக்​களவை​யில் தோற்​கடிக்​கப்​பட்​டது. இதையடுத்து பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோ​தாவை உடனே அமல்​படுத்​தக் கோரி தீர்​மானம் நிறைவேற்ற சத்தீஸ்கரில் ஒரு நாள் சட்​டப்​பேரவை சிறப்​புக் கூட்​டம் நேற்று கூட்​டப்​பட்​டது. இதில் தீர்​மானத்தை தாக்​கல் செய்து முதல்​வர் விஷ்ணு தியோ சாய் பேசுகை​யில், ‘‘தொகுதி மறு​வரையறையை தொடர்ந்​து, பெண்​களின் கவுர​வம், வளர்ச்​சி, மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் 3-ல் ஒரு பங்கு இடஒதுக்​கீடு ஆகிய​வற்றை உடனே அமல்​படுத்த வேண்​டும்’’ என்​றார்.

இந்த தீர்​மானம் தொடர்​பாக சத்​தீஸ்​கர் சட்​டப்​பேர​வை​யில் 4 மணி நேரம் விவாதம் நடை​பெற்​றது. அப்​போது எதிர்க்​கட்சி தலை​வர் சரண் தாஸ் மகந்த், மக்​களவை​யில் தற்​போதுள்ள எம்​.பி.க்​களின் எண்​ணிக்​கை​யிலேயே பெண்​களுக்கு 33% இடஒதுக்​கீட்டை வழங்க வேண்​டு​கோள் விடுத்து மற்​றொரு தீர்​மானத்தை தாக்​கல் செய்​தார்.

இதை அனு​ம​திக்க முடி​யாது என சபா​நாயகர் ரமண் சிங் கூறி​னார். இதேபோல் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கடந்த திங்கள் கிழமை, பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை உடனே அமல்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

SCROLL FOR NEXT