டெல்லி சட்​டப்​பேரவை சபா​நாயகர் விஜேந்​தர் குப்​தா

 
இந்தியா

டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா மீது வழக்கு: 3 பஞ்சாப் போலீஸ் அதிகாரிக்கு டெல்லி சபாநாயகர் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சட்​டப்​பேரவை கூட்டம் கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது. அப்​போது, சீக்​கிய குரு தேஜ் பகதூரை எதிர்க்​கட்​சித் தலை​வர் ஆதிஷி அவம​தித்ததாக பாஜக குற்​றம் சாட்​டியது. இது தொடர்​பான வீடியோவை சட்ட அமைச்​சர் கபில் மிஸ்ரா வெளி​யிட்​டார்.

இதனிடையே ஆதிஷி​யின் வீடியோவை உள்​நோக்​கத்​துடன் எடிட்​டிங் செய்து போலி வீடியோவை வெளி​யிட்​ட​தாக பஞ்​சாப் போலீஸாரால் டெல்லி சட்ட அமைச்​சர் கபில் மிஸ்ரா மீது எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்டு உள்ளது.

இது தொடர்​பாக டெல்லி சட்​டப்​பேரவை சபா​நாயகர் விஜேந்​தர் குப்​தா, பஞ்​சாப் டிஜிபி, குற்​றப்​பிரிவு டிஜிபி மற்​றும் ஜலந்​தர் போலீஸ் கமிஷனர் ஆகியோ​ருக்கு நேற்று நோட்​டீஸ் அனுப்​பி​னார்.

அதில், ‘‘சம்​பந்​தப்​பட்ட வீடியோ டெல்லி பேர​வை​யின் சொத்​து. இதை பஞ்​சாப் போலீ​ஸார் பயன்​படுத்​து​வது கிரிமினல் குற்​றம். வீடியோ விவ​காரத்​தில் அமைச்​சர் கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது குறித்​து 48 மணி நேரத்​தில்​ விளக்​கம்​ அளிக்க வேண்​டும்​’’ என்​று தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT