இந்தியா

5 மாநிலங்களில் 7 தொகுதியில் இடைத் தேர்தல்: குஜராத் உட்பட 4 இடங்களில் பாஜக வெற்றி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐந்து மாநிலங்​களில் உள்ள 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத்தேர்​தலில் 4 தொகு​தி​களில் பாஜக வெற்​றி​ பெற்​றுள்​ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

குஜ​ராத், நாகாலாந்​து, திரிபு​ரா, கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா ஆகிய மாநிலங்​களில் 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத் தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யா​யின. இதில் குஜ​ராத்​தின் உம்​ரேத் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் ஹர்​சத்​பாய் கோவிந்த்​பாய் பர்​மர் வெற்றி பெற்​றார். நாகாலாந்து கோரி​டாங் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் டவோசி​யர் ஐ இம்​சென் வெற்றி பெற்​றார்.

திரிபு​ரா​வின் தரம்​நகர் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் ஜஹர் சக்​ர​வர்த்தி வென்​றார். மகா​ராஷ்டி​ரா​வின் ராகுரி தொகு​தி​யில் நடை​பெற்ற தேர்​தலில் பாஜக வேட்​பாளர் அக்​ஷய் சிவாஜி​ராவ் வெற்றி பெற்​றார். பாராமதி தொகு​தி​யில் அஜித் பவார் மறைவை தொடர்ந்து நடை​பெற்ற இடைத் தேர்​தலில் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி வேட்​​பாள​ரும்​, துணை முதல்​வரு​மான சுனேத்​ரா ப​வார்​ சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்​றி பெற்​றார்​.

காங்கிரஸ் 2-ல் வெற்றி

கர்​நாட​கா​வில் பாகல்​கோட்​டை, தாவணகெரே தெற்கு ஆகிய இரு தொகு​தி​களுக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. இதில் ஆளும் காங்​கிரஸ் சார்​பில் உமேஷ் மேத்தி (பாகல்​கோட்​டை), சமர்த் சாமனுர் மல்​லி​கார்​ஜூன் (தாவணகெரே தெற்​கு) களமிறக்​கப்​பட்டனர். அவர்​களுக்கு எதி​ராக பாஜக சார்பில் வீரபத்​ரையா சரடிமத் (பாகல்​கோட்​டை), சீனி​வாசா தாசகரியப்பா (தாவணகெரே தெற்​கு) ஆகியோர் வேட்​பாளர்​களாக களமிறக்​கப்​பட்​டனர்.

அங்கு பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன. பாகல்​கோட்​டை​ தொகுதியில் காங்​கிரஸ் வேட்​பாளர் உமேஷ் மேத்தி 98 ஆயிரத்து 919 வாக்​கு​கள் பெற்று, வீரபத்​ரையா சரடிமத்தை 22 ஆயிரத்து 323 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​னார்.

தாவணகெரே தெற்கு தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் சமர்த் சாமனுர் மல்​லி​கார்​ஜூன் 69,578 வாக்​கு​கள் பெற்று, சீனி​வாசா தாசகரியப்பாவை (பாஜக) 5,708 வாக்​கு​கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கர்நாடகாவில் இரு தொகு​தி​களை​யும் காங்​கிரஸ் தக்க வைத்துக் கொண்​ட​தால் அக்​கட்​சி​யின் தொண்​டர்​கள் பட்டாசு வெடித்​தும், இனிப்​பு​கள் வழங்​கி​யும் கொண்​டாடினர்.

SCROLL FOR NEXT