ஹக்ராமா மொஹிலாரி

 
இந்தியா

அசாமில் பரம எதிரியாக இருந்த போடோலாந்து மக்கள் முன்னணித் தலைவர் பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்?

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாமில் பரம எதிரி​யாக இருந்த போடோலாந்து மக்​கள் முன்​னணி கட்​சித் தலை​வர் பாஜக கூட்​ட​ணி​யில் இணைந்​தது ஏன் என்ற தகவல்​கள் தற்​போது வெளி​யாகி​யுள்​ளன.

அசாம் சட்​டப் பேர​வை​யில் உள்ள 126 தொகு​தி​களுக்கு வரும் ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் போடோலாந்து மக்​கள் முன்​னணி​யைச் சேர்ந்த தலை​வர் ஹக்​ராமா மொஹிலாரி பாஜக கூட்​டணி​யில் இணைந்​துள்​ளது அக்​கட்சியின் பலத்தை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது. ஹக்​ராமா மொஹிலாரி, பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்​தவர். அவர் ஏன் பாஜக​வில் இணைந்​தார் என்று அரசி​யல் நிபுணர்​கள் புரு​வத்தை உயர்த்தி வரு​கின்​றனர்.

          

ஏனெனில் கடந்த 2021-ல் முதல்​வரும், பாஜக மூத்த தலை​வரு​மான ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கும், ஹக்​ராமா மொஹிலாரிக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்​நிலை​யில் தற்​போதைய தேர்​தலில் பாஜக, போடோலாந்து மக்​கள் முன்​னணியை அழைத்து கூட்​டணி வைத்​துக் கொண்​டுள்​ளது. 5 ஆண்​டு​களுக்கு முன்​னர் இருந்த பகை தற்​போது வில​கி​விட்​டது.

இதுகுறித்து குவாஹாட்டி பல்​கலைக்​கழகத்​தில் அரசி​யல் அறி​வியல் பிரிவு ஆராய்ச்​சிப் பிரிவு நிபுணர் மிருதுகுஞ்​சன் தேகா கூறும்​போது, “அசாமில் பிரபல​மான பழங்​குடி​யினப் பிரிவு தலை​வ​ராக ஹக்​ராமா மொஹிலாரி விளங்​கு​கிறார். கடந்த 5 ஆண்​டு​களில் அவர் அதிக அளவில் மக்​களிடையே செல்​வாக்​குப் பெற்​றுள்​ளார்.

அதனால்​தான் பாஜக, அவரது கட்​சி​யுடன் கூட்​டணி வைத்​துள்​ளது. இதன்​மூலம் தேர்​தலில் அதிக அளவி​லான வாக்​கு​களைப் பெற முடி​யும் என பாஜக கணக்​குப் போடு​கிறது" என்​றார்.

SCROLL FOR NEXT