இந்தியா

பாஜகவின் 47-வது நிறுவன தின கொண்டாட்டம்: குஜராத், உ.பி. உட்பட 21 மாநிலங்களில் பாஜக, என்டிஏ ஆட்சி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்தி​யில் ஆளும் பாஜக​வின் 47-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. தற்போது 21 மாநிலங்​களில் பாஜக அல்​லது தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி நடை​பெறுகிறது.

கடந்த 1977-ம் ஆண்​டில் அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்​து, ஜனசங்​கம் ‘ஜனதா கட்​சி​யுடன்' இணைந்தது. எனினும் சித்​தாந்​த ரீ​தி​யான வேறு​பாடு​களின் காரண​மாக, கடந்த 1980ம் ஆண்டு ஏப்​ரல் 6ம் தேதி 'பார​திய ஜனதா கட்​சி' உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 1984-ல் இரண்டு மக்களவை தொகு​தி​களு​டன் பாஜக​வின் பயணம் தொடங்​கியது.

          

இவர்​களில் ஒரு​வர், குஜ​ராத்​தின் ஏ.கே.படேல். மற்​றொரு​வர் ஆந்திரா​வின் ஹனம்​கொண்​டாவைச் சேர்ந்த ஜங்கா ரெட்டி ஆவார். பாஜக​வின் தேர்​தல் சின்​ன​மான தாமரை, இந்​தி​யா​வின் தேசிய மலர். 1857-ல் நடை​பெற்ற முதல் இந்​தி​யச் சுதந்​திரப் போரின்​ போது, ரொட்டி மற்​றும் தாமரை முக்​கியச் சின்னங்களாகப் பயன்​படுத்​தப்​பட்​டன.

இவற்​றில், தாமரையை சின்​ன​மாக்கி அதை இந்​தி​யப் பண்​பாடு மற்​றும் தேசி​யப் பெரு​மை​யுடன் பாஜக தொடர்​புபடுத்தி பார்க்கிறது. பிற கட்​சிகளு​ட​னான சித்​தாந்த ரீதியி​லான தொடர்புகளின் விளை​வாகவே பாஜக உரு​வானது. இதன் சித்​தாந்​தங்​களை 1951-ல் டாக்​டர் ஷ்யாமா பிர​சாத் முகர்ஜி பார​திய ஜனசங் மூலம் வளர்த்​தார்.

மத்​தி​யில் தனது பதவிக்​காலத்தை முழு​மை​யாக நிறைவு செய்த முதல் காங்​கிரஸ் அல்​லாத அரசாக பாஜக உள்​ளது. இந்​திய அரசியல் வரலாற்​றில் முழு​மை​யான ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை (1999-2004) நிறைவு செய்த பாஜக பிரதம​ராக அடல் பிஹாரி வாஜ்​பாய் திகழ்ந்​தார்.

கடந்த 2014ம் ஆண்​டில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் ஆட்சி தொடங்​கியது. தற்​போது மூன்​றாவது பதவிக் காலத்தை அவர் தொடர்​கிறார். மிக நீண்ட காலம் அரசுத் தலை​வ​ராகப் பணியாற்றிய​வர் என்ற பெரு​மையை பிரதமர் நரேந்​திர மோடி பெற்​றுள்​ளார். சிக்​கிம் முன்​னாள் முதல்​வர் பவன் சாம்​லிங்​கின் 8,930 நாட்​கள் சாதனையை அவர் முறியடித்​துள்​ளார்.

சுமார் 18 கோடி உறுப்​பினர்​களைக் கொண்ட உலகின் மிகப்​பெரிய அரசி​யல் கட்​சி​யாக பாஜக திகழ்​கிறது. நாட்​டின் மிகுந்த செல்​வம் கொண்ட கட்​சி​யாக​வும் கருதப்​படு​கிறது. ஜனநாயக சீர்திருத்த சங்க அறிக்​கை​யின்​படி, 2024- 25 நிதி​யாண்​டில் கட்சியின் வரு​மானம் ரூ.6,769 கோடி ஆகும். மத்​தி​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது.

மேலும் ஹரி​யா​னா, ராஜஸ்​தான், குஜ​ராத், டெல்​லி, உத்​த​ராகண்ட், உத்தர பிரதேசம், மகா​ராஷ்டி​ரா, கோவா, மத்​திய பிரதேசம், சத்தீஸ்​கர், ஒடி​சா, நாகாலாந்​து, திரிபு​ரா, மேகால​யா, மிசோரம், சிக்​கிம், அருணாச்​சலப் பிரதேசம், அசாம், மணிப்​பூர், பிஹார் மற்றும் ஆந்​திரா ஆகிய மாநிலங்​களில் பாஜக அல்​லது என்​டிஏ அரசுகள் ஆட்​சி​யில் உள்​ளன.

தற்​போது 5 மாநிலங்​களில் நடை​பெறும் சட்​டப்​பேர​வைத் தேர்தல்களி​லும் பாஜக தீவிர​மாக களமிறங்கி உள்​ளது. தமிழ்நாட்டில், அதி​முக​வுடன் இணைந்து ஆட்​சிக்கு வரு​வதற்கு முயற்சி செய்​கிறது. மேற்கு வங்கத்​தில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கத்​ தீவிரம்​ காட்​டி வரு​கிறது.

SCROLL FOR NEXT