இந்தியா

பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம்

‘வெளிநாட்டு சக்திகள் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார்’

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலை​மையி​லான அரசை கவிழ்க்க காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி சதி செய்​வ​தாக பாஜக குற்றம்சாட்​டி​யுள்​ளது. அவர் வெளி​நாட்டு சக்​தி​களின் தூண்​டு​தலின் பேரில் செயல்​படு​வ​தாக​வும் பாஜக குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

காங்​கிரஸ் கட்​சி​யின் சிறு​பான்​மை​யினர் பிரி​வின் ஆலோ​சனைக் குழு கூட்​டம் சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில், அக்​கட்​சி​யின் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலை​மையி​லான அரசு ஓராண்​டுக்​குள் கவிழும் என்று பேசி​ய​தாக தகவல் வெளி​யானது. இதைத் தொடர்ந்​து, ராகுல் காந்​தி​யின் சதித் திட்​டம் அம்பலமாகிவிட்டதாக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல பாஜக தலை​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த ஊடக செய்​தியை எக்ஸ் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​துள்ள மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல், இந்தி மொழி​யில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ராகுல் காந்​தி​யின் இந்த கருத்து காங்கிரஸ், பல எதிர்க்​கட்​சிகள் மற்​றும் ‘டூல்​கிட் கும்​பல்' (toolkit gang) ஆகியவை இணைந்து இந்​தி​யாவை நிலைகுலை​யச் செய்ய நினைக்​கும் ஒரு பெரிய சதியை சுட்​டிக்​காட்​டு​கிறது. இது ஒரு சாதாரண கருத்து அல்ல. மாறாக, நாட்​டில் அராஜகத்​தைப் பரப்​புவதை நோக்​க​மாகக் கொண்ட ஒரு கடுமை​யான சதி​யாகும்.

தேர்​தல் களத்​தில் காங்​கிரஸால் பாஜக​வைத் தோற்​கடிக்க முடியாது என்​ப​தை​யும், மக்​கள் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்​துள்​ள​தால் மோடி அரசை அகற்ற முடி​யாது என்ப​தை​யும் உணர்ந்​து​கொண்ட ராகுல் காந்​தி​யும் அவரது கூட்டாளி​களும் நாடு முழு​வதும் வன்​முறையைத் தூண்ட முயற்சிக்​கின்​றனர். இந்​தியா மீதான அவர்​களின் வெறுப்பு மிகவும் ஆழமானது. நாட்​டில் எந்​தவொரு நேர்​மறை​யான விஷயங்​கள் நடப்​ப​தை​யும் அவர்​களால் பொறுத்​துக்​கொள்ள முடியாது.

இந்த நாட்டு மக்​கள் விவேக​மானவர்​கள். ராகுல் காந்​தி, எதிர்க்கட்சிகள் மற்​றும் நாட்​டின் நலனுக்கு எதி​ராக செயல்​படும் டூல்​கிட் கும்​பலின் உண்​மை​யான தன்​மையை அவர்​கள் முழுமையாகப் புரிந்​து​கொண்​டுள்​ளனர். மக்​கள் அவ்​வப்​போது இத்​தகைய சக்​தி​களுக்கு வலு​வான பதிலடி கொடுத்​துள்​ளனர். இந்தி​யா​வுக்கு தீ வைக்க நினைக்​கும் ‘இன்​டி’ கூட்​ட​ணி​யின் சதி ஒரு​ போதும் வெற்றி பெறாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் சம்​பிட் பத்ரா வெளி​யிட்ட வீடியோ செய்​தி​யில், “நாட்​டில் கலவரங்​களைத் தூண்​டி, அராஜகத்தின் மூலம் மோடி அரசை வீழ்த்த ராகுல் காந்தி முயற்சிக்​கிறார்.

இந்​தி​யா​வில் ஜனநாயகத்தை முடிவுக்​குக் கொண்​டு​வரும் நோக்​கில், ஜார்ஜ் சோரஸ் போன்ற தனது எஜமானர்​கள் மற்​றும் அவரது வெளி​நாட்​டுப் பயணங்​களுக்கு நிதி​யளிக்​கும் வெளி​நாட்டு நிறு​வனங்​களின் தூண்​டு​தலின் பேரில், ராகுல் காந்தி ஒரு வெளி​நாட்டு திட்​டத்தை செயல்படுத்துகிறார் என்​பதை அவரது கருத்​துகள் திட்​ட​வட்​ட​மாக தெளிவுபடுத்​துகின்​றன. மோடி அரசுக்கு மக்​களின் ஆசி இருக்​கும் வரை, அது நாட்​டுக்​கு தொடர்ந்​து சேவை செய்​யும்​’’ என கூறியுள்ளார்​.

SCROLL FOR NEXT