இந்தியா

டாடா குழுமத்திடம் ரூ.757 கோடி நன்கொடை பெற்ற பாஜக

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டாடா குழும நிறு​வனங்​களின் தேர்​தல் அறக்​கட்​டளை​யான புரொக்​ரஸிவ் எலக்ட்​ரல் டிரஸ்ட் (பிஇடி), 2024-25 நிதி​யாண்​டில் அரசி​யல் கட்​சிகளுக்கு வழங்​கிய நன்​கொடை விவரங்​களை தேர்​தல் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்​துள்​ளது.

இதன்படி 10 கட்​சிகளுக்கு மொத்​தம் ரூ.914 கோடி நன்​கொடை வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில் அதி​கபட்​ச​மாக 83% (ரூ.757 கோடி) பாஜக​வுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

காங்​கிரஸ் கட்​சிக்கு வெறும் 8.4% (ரூ.77.3 கோடி) வழங்​கப்​பட்​டுள்​ளது. இது​போல திரிண​மூல் காங்​கிரஸ், திமுக உள்ளிட்ட 8 கட்​சிகளுக்கு தலா ரூ.10 கோடி நன்​கொடை வழங்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT