மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கலிதா மாஜி
ஆஷ்கிராம்: மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ஆஷ்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் தொடர்ந்து 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டம் ஆஷ்கிராம் பகுதியைச் சேர்ந்தவர் கலிதா மாஜி. கணவரின் வருமானம் குறைவாக இருப்பதால், இவர் 2 வீடுகளில் வேலை செய்து மாதம் ரூ.4,000 சம்பாதிக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக இவர்பாஜகவில் உள்ளார்.
இவரை கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆஷ்கிராம் தொகுதி வேட்பாளராக பாஜக நிறுத்தியது. ஆனால், அவர் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் தற்போது நடைபெறும் தேர்தலிலும் கலிதா மாஜியை மீண்டும் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து கலிதா மாஜி கூறும்போது, “தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கும் என நினைக்கவில்லை. பாஜக என்மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்பை வழங்கியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவேன். எனக்கு வேலை கொடுத்தவர்களும், நான் இந்த முறை வெற்றி பெற வாழ்த்தி அனுப்பியுள்ளனர்” என்றார்.