கிளியுடன் அருண் குமார்

 
இந்தியா

ரூ.2.5 லட்சத்துக்கு வாங்கிய வெளிநாட்டு கிளியை பிடிக்க முயன்ற தொழிலதிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

இரா.வினோத்

பெங்களூரு: பெங்​களூரு​வில் வெளி​நாட்டு ரகத்தை சேர்ந்த ரூ.2.5 லட்​சம் மதிப்​பிலான செல்​லக் கிளியை பிடிக்க முயற்​சித்த தொழில​திபர் மின்​சா​ரம் தாக்கி உயி​ரிழந்​தார்.

பெங்​களூரு​வில் உள்ள கிரிநகரைச் சேர்ந்​தவர் அருண் குமார் (32). தொழில​திப​ரான இவர் அங்​குள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் தனது குடும்​பத்​தினருடன் வசித்து வந்​தார். இவர் தென் அமெரிக்​கா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்ட ரூ.2.5 லட்​சம் மதிப்​புள்ள மெக்​காவ் ரக கிளியை வளர்ந்து வந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன் தினம் இந்த கிளி வீட்​டில் இருந்து பறந்து சென்​று, அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வளாகத்​தின் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்​தின் மீது அமர்ந்​தது. அந்த கிளி மின்​சா​ரம் தாக்கி இறந்து விடுமோ என அஞ்​சிய அருண் குமார், இரும்பு கம்பி ஒன்றை வைத்து அதனை காப்​பாற்ற முயன்​றுள்​ளார். அப்​போது எதிர்​பா​ராத வித​மாக இரும்பு கம்பி மின்​சார கம்​பி​யின் மீது மோதி​ய​தால் மின்​சா​ரம் தாக்கி தூக்கி வீசப்​பட்​டார்.

இதையடுத்​து, அவரது உறவினர்​கள் உடனடி​யாக அரு​கிலுள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அருண்​கு​மாரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் அவர் ஏற்​க​னவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

இச்​சம்​பவம் குறித்து கிரிநகர் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் கிளி அமர்ந்​திருந்த உயர் அழுத்த மின்​கம்பி 66 ஆயிரம் மெகா வாட் சக்தி கொண்​டது. அதில் இரும்பு கம்பி பட்​ட​தால் மின்​சா​ரம் தாக்​கியது சிசிடிவி கேம​ரா​வில் பதி​வானது தெரிய​வந்​தது.

உயி​ரிழந்த அருண்​கு​மாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, அவரது குடும்​பத்​தினரி டம் நேற்​று ஒப்​படைக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT