மீட்கப்பட்ட ரூ.5.7 கோடி ரொக்கம்

 
இந்தியா

பெங்களூரு ஏடிஎம் வேன் கொள்ளை: ரூ.5.7 கோடி மீட்பு; போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் கைது!

வெற்றி மயிலோன்

பெங்களூரு: பெங்களூருவில் நவம்பர் 19 அன்று பகல்நேரத்தில் நடந்த துணிகரமான ஏடிஎம் வேன் கொள்ளையில், 50 மணி நேரத்தில் ரூ.5.7 கோடி மீட்கப்பட்டதுடன், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்​களூரு​வில் உள்ள ஜே.பி. நகரில் எச்​டிஎஃப்சி வங்கிக் கிளையில் இருந்து நவம்பர் 19 அன்று பணம் ஏற்​றிக்​கொண்டு சிஎம்​எஸ் நிறு​வனத்​தின் வேன் ஜெயநகர் அசோகா தூண் அருகே சென்​றது. அப்​போது இன்​னோவா வாக​னத்​தில் வந்த மர்ம நபர்கள் அதனை வழிமறித்து ரிசர்வ் வங்கி அதி​காரி​களை போல நடித்து ரூ.7.11 கோடியை கொள்​ளை​யடித்து சென்​றனர்.

இதுகுறித்து சித்​தபுரா போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, 4 தனிப்​படைகளை அமைத்து விசா​ரணை நடத்தினர். பணம் கொள்​ளை​யடிக்​கப்​பட்​ட​போது சிஎம்​எஸ் வேனில் இருந்த வங்கி ஊழியர் தம்மை​யா, துப்​பாக்கி ஏந்​திய பாது​காவலர் ராஜண்​ணா, ஓட்​டுநர் வினோத், காவலர் அஃப்​தாப் ஆகிய 4 பேரிட​மும் தனிப்​படை போலீ​ஸார் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்​தினர்.

சிசிடிவி கவரேஜ் இல்லாத பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாகனத்தை ஓட்டிச் சென்றதாலும், போலி எண்களைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தியதாலும், மொபைல் போன்களைத் தவிர்த்ததாலும் போலீஸார் நடத்திய விசாரணையில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் 200 போலீஸார் தப்பி ஓடியவர்களைக் கண்டறிய வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் ரூ.5.7 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். போலீஸ் கான்ஸ்டபிள் அன்னப்ப நாயக், பணம் எடுத்துச் செல்லும் வாகன பொறுப்பாளர் கோபால் பிரசாத் மற்றும் பணம் எடுத்துச் செல்லும் வாகன நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஜே. சேவியர் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்களை 50 மணி நேரத்தில் கைது செய்த புலனாய்வு குழுவுக்கு பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை அறிவித்தார்.

SCROLL FOR NEXT