இந்தியா

பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

என். மகேஷ்குமார்

திருமலை: பிரம்​மோற்ச விழா​வினையொட்​டி, திருப்பதி ஏழுமலையான் கோயி​லில் நேற்று காலை ஆகம விதி​களின்​படி கோயில் முழு​வதும் சுத்​தம் செய்​யப்​பட்​டது. இதனால் பக்​தர்​கள் பிற்​பகலுக்கு பின்​னரே சுவாமி தரிசனம் செய்ய அனு​ம​திக்​கப்​பட்​டனர். திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசி, ஆனி​வார ஆஸ்​தானம், தெலுங்கு உகாதி மற்​றும் பிரம்​மோற்சவ விழா ஆகிய இந்த விழாக்​களுக்கு முன் வரும் செவ்​வாய்​க்கிழமை, கோயி​லில் ஆழ்​வார் திரு​மஞ்​சனத்தை கடைபிடிப்​பது ஐதீகம்.

தற்​போது, வரும் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பிரம்​மோற்சவ விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​வதை முன்​னிட்​டு, நேற்று ஏழு​மலை​யான் கோயில் முழு​வதும் பன்​னீரில் மஞ்​சள், குங்​குமம், பச்சை கற்​பூரம் போன்ற வாசனை பொருட்​களை கலந்து சுத்​தம் செய்​தனர்.

கோயில் கரு​வறை முதற்​கொண்​டு, கொடிமரம், பலிபீடம், உபசன்​ன​தி​கள், முகப்பு கோபுர வாசல், விமான கோபுரம் என அனைத்து இடங்​களும் வாசனை திர​வி​யத்​தால் சுத்​தம் செய்​யப்​பட்​டது. அதன்​பின்​னர், பிற்​பகல் 12 மணிக்கு பின்​னரே பக்​தர்​கள் சுவாமியை தரிசிக்க அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர். நாயுடு, கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்​ரி, திருப்​பதி எஸ்பி சுப்​பு​ரா​யுலு, அறங்​காவலர் குழு உறுப்​பினர் பானுபிர​காஷ் உட்​பட பலர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT