இந்தியா

உ.பி.யில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் முறைகேடு: 300 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்​தர பிரதேசத்​தில் நோயாளி​யின் சிகிச்​சைக்கு பிறகு அதன் கட்டண விவரம், ஆவணங்​களு​டன் ஆயுஷ்​மான் பாரத் திட்​டத்​தின் காப்​பீடு பெற சமர்ப்​பிக்​கப்​படு​கிறது.

இது தொடர்​பான புகார்​களை தொடர்ந்து கடந்த ஜனவரி முதல், கட்​ட​ணங்​களை தரு​வதற்கு முன் கடுமை​யான சரி​பார்ப்பு நடை​முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இப்​பணி​யில், ஆயுஷ்​மான் பாரத் யோஜனா திட்​டத்தை செயல்​படுத்​தும் ‘விரி​வான சுகாதாரம் மற்​றும் ஒருங்​கிணைந்த சேவை​களுக்​கான மாநில முகமை' (எஸ்​ஏசிஎச்​எஸ்) இறங்​கியது.

இதில் பல தனி​யார் மருத்​து​வ​மனை​கள், சாதாரண வார்​டில் சிகிச்சை அளிக்​கக்​கூடிய நோயாளி​களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசி​யு) அனு​ம​தித்து பல நாட்​கள் சிகிச்சை அளித்​த​தாக காட்​டி​யிருப்​பது தெரிய​வந்​தது. இதன் மூலம் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்​கப்​பட்​டதும் ஆய்​வில் தெரிய​வந்​தது. இதையடுத்து அத்​தகைய சுமார் 300 மருத்​து​வ​மனை​களுக்​கான கட்​ட​ணப் பரி​மாற்​றம் உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டது.

ஆயுஷ்​மான் திட்​டத்​துடன் இணைக்​கப்​பட்ட மருத்​து​வ​மனை​கள் 35 புதிய அளவு​ கோல்​களைப் பூர்த்தி செய்​து, அதற்​கேற்ப கட்டணங்களைப் பெறும் நடை​முறை அமல்​படுத்​தப்​பட்​டது. இதில் கடந்த ஜனவரி முதல் தற்​போது வரை, புதிய தரநிலைகளின் ​படி செயல்​ப​டாத மற்​றும் முறை​கேடு​களில் ஈடுபட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்ட சுமார் 200 மருத்​து​வ​மனை​கள் இத்​திட்​டத்​தில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன. இது​போல், ஜனவரி முதல், சந்​தேகத்​திற்​கிட​மான ஆவணங்​களை கொண்ட சுமார் 300 நோயாளி​களுக்​கான கட்​ட​ணம் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த நோயாளி​கள் மற்​றும் அவர்​களுக்கு சிகிச்சை அளித்த மருத்​து​வ​மனை​களில் கள ஆய்வு மேற்​கொள்ள எஸ்​ஏசிஎச்​எஸ் முடிவு செய்​தது. இதில் தணிக்​கைக் குழுக்​கள் மருத்​து​வ​மனை​களுக்கு நேரில் சென்று ஆவணங்​களை ஆய்வு செய்​து, அங்கு சிகிச்சை பெற்ற நோயாளி​களிடம் உரை​யாடியது. இதன் மூலம் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்​து​வர்​கள்​ அடை​யாளம்​ ​காணப்​பட்​டு, அவர்​கள்​ மீது நடவடிக்​கை எடுக்கப்பட்​டு வருகிறது.

SCROLL FOR NEXT