இந்தியா

மத்திய அரசு வேலைக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய அரசுப் பணி​களுக்​காக தேர்வு செய்​யப்​பட்ட 51 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இளைஞர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொளி வாயி​லாக பணி நியமனக் கடிதங்களை வழங்​கி​னார்.

நாடு முழு​வதும் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்க வகை செய்​யும் ‘ரோஜ்கர் மேளா' திட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி​யால் கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபரில் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் மூலம் ஆயிரக்​கணக்​கான இளைஞர்​களுக்கு பணி நியமனக் கடிதம் வழங்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்ச்​சி​யில், பிரதமர் மோடி காணொளி வாயி​லாக பங்​கேற்​று, மத்​திய அரசின் பல்​வேறு அமைச்​சகங்​கள் மற்​றும் துறை​களுக்கு புதி​தாக தேர்வு செய்​யப்​பட்ட 51 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இளைஞர்​களுக்கு பணி நியமனக் கடிதங்​களை வழங்​கி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் உள்ள ஆயிரக்​கணக்​கான இளைஞர்​களுக்கு இன்று மிக முக்​கிய​மான நாள். அரசுப் பணி​களுக்​கான நியமனக் கடிதங்​களை பெற்​றுள்​ள இவர்​கள் நாட்​டின் வளர்ச்​சிப் பயணத்​தில் முக்​கியப் பங்​காளி​களாக மாறுகிறார்​கள். ரயில்​வே, வங்​கி, பாது​காப்​பு, சுகா​தா​ரம், கல்வி உள்​ளிட்ட பல துறை​களில் இந்த இளைஞர்​கள் புதிய பொறுப்​பு​களை ஏற்​க​வுள்​ளனர். வரும் ஆண்​டு​களில், வளர்ந்த இந்​தியா என்ற இலக்கை அடைவ​தில் நீங்​கள் அனை​வரும் முக்​கியப் பங்கு வகிக்​கப் போகிறீர்​கள். இந்த சாதனைக்​காக உங்​களுக்​கும், உங்​கள் குடும்​பத்​தினருக்​கும் எனது மனமார்ந்த வாழ்த்​துகள்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

நாடு முழு​வதும் நேற்று 47 இடங்​களில் இந்த ரோஜ்கர் மேளா நடை​பெற்​றது. ரோஜ்கர் மேளா தொடங்​கப்​பட்​ட​தில் இருந்து நாடு முழு​வதும் இது​வரை சுமார் 12 லட்​சம்​ பேருக்​கு பணி நியமனக்​ கடிதம்​ வழங்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT