இந்தியா

ஜெகன் ஆட்சியில் மேலும் ஓர் ஊழல் அம்பலம்: திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்

என். மகேஷ்குமார்

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முக்​கிய கோயில்​களில் திருப்​பதி கோவிந்​த​ராஜர் கோயிலும் ஒன்​றாகும்.

முன்​னாள் முதல்​வர் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​யின்​போது இந்த கோயி​லின் விமான கோபுரத்​துக்கு தங்க தகடு​கள் (100 கிலோ) பதிக்​கப்​பட்​டன. தற்​போது கோயி​லில் மராமத்து பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் விமான கோபுரத்​தில் 50 கிலோ தங்​கம் மாய​மாகி இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

கடந்த 2022-23-ம் ஆண்​டில் கோவிந்​த​ராஜர் கோயில் விமான கோபுரத்​தில் தங்க தகடு​கள் பதிக்​கும் பணி நடை​பெற்​றது. இதற்​காக திருப்​பதி தேவஸ்​தானம் 100 கிலோ தங்​கத்தை வழங்​கியது. 9 அடுக்கு தங்க தகடு​களை பதிக்க ஒப்​பந்​தம் கொடுக்​கப்​பட்​டது. ஆனால், தற்​போதைய பரிசோதனை​யில் 2 அடுக்கு தங்க தகடு​கள் மட்​டுமே பொருத்​தப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

மேலும் தங்க தகடு​களை பொருத்​தி​ய​போது விமான கோபுரத்​தில் இருந்த சுமார் 30 சிலைகள் உடைக்​கப்​பட்டு உள்​ளன. அப்​போதைய அறங்​காவலர் குழுத் தலை​வரும் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் சித்​தப்பாவு​மான ஒய்​.வி சுப்பா ரெட்​டி, நிர்​வாக அதி​காரி தர்மா ரெட்டி ஆகியோர் இந்த விவ​காரத்தை வெளியே வரவி​டா​மல் தடுத்​து​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

தற்​போது தங்​கம் மாய​மான விவ​காரம் குறித்து திருப்​பதி தேவஸ்​தான விஜிலென்ஸ் துறை தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. தங்க தகடு​கள் பொருத்​திய தொழிலா​ளர்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் முழு​மை​யாக விசா​ரணை நடத்​தப்பட உள்​ளது.

ஏற்கனவே ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பரகாமணியில் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT