இந்தியா

வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,120 கோடி சொத்து முடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்​பானிக்கு சொந்​த​மான நிறு​வனங்​களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்​தது. பின்​னர் இந்த முதலீடு வாராக் கடன்​களாக மாறின.

இதுகுறித்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூல​மாக அனில் அம்​பானி குழு​மத்​தின் நிதி நிறு​வனங்​களுக்கு வந்​துள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்து அனில் அம்​பானி​யின் 18 சொத்​துக்​களை அமலாக்​கத் துறை தற்போது முடக்​கியது. இவற்​றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரை ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.40,185 கோடி கடன் பெற்று அதை தவறாக பயன்​படுத்தி​யது.

இந்த முறை​கேடு​களை​யும் அமலாக்​கத்​துறை விசா​ரித்து அனில் அம்​பானி​யின் ரிலை​யன்ஸ் குழு​மத்​துக்கு சொந்​த​மான ரூ.8,997 கோடி மதிப்​பிலான சொத்​துக்​களை ஏற்​கெனவே முடக்​கி​யுள்​ளது. தற்​போது முடக்​கப்​பட்ட ரூ.1,120 கோடி சொத்​துக்​களை​யும் சேர்த்து மொத்​தம் ரூ.10,117 கோடி மதிப்​பிலான சொத்​துக்​களை அமலாக்​கத்​துறை முடக்​கி​யுள்​ளது.

SCROLL FOR NEXT