இந்தியா

கங்கை - காவிரி நதிகளை இணைத்தால் நாட்டின் தண்ணீர் பிரச்சினை தீரும்: சந்திரபாபு நாயுடு ஆலோசனை

என்.மகேஷ்குமார்

விஜயவாடா: ஆந்​திர மாநிலம், இப்​ரஹிம்​பட்​டினம் அருகே கிருஷ்ணா - கோதாவரி சங்​கமிக்​கும் இடத்​தில் நேற்று புனித ஆரத்தி நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு நாயுடு பங்​கேற்​றார்.

பின்​னர் அங்கு ஏற்​பாடு செய்​திருந்த கூட்​டத்​தில் அவர் பேசியதாவது: “வரும் 2027, மார்ச் மாதத்​திற்​குள் போல​வரம் அணையை திறந்து நாட்​டுக்கு அர்ப்​பணிப்​போம். நாங்​கள் ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்​டு​களில் நீர்​வளத்​துறை​யில் சிற்றணை​கள், தடுப்​பணை​களுக்​காக ரூ.24 ஆயிரம் கோடி செலவிட்​டுள்​ளோம்

அடுத்த 3 ஆண்​டு​களில் ரூ.35 ஆயிரம் கோடி செலவு செய்​து, மேலும் 35 நீர்​நிலை திட்​டங்​களை நிறைவு செய்​வோம். பென்னா - வம்​ச​தாரா நதி​கள் இணைக்​கப்​பட்​டால் ஆந்​திர மாநிலத்​தில் வறட்சி என்​பதே ஏற்​ப​டாது. இதே​போன்று கங்​கை, காவிரி நதிகளை இணைத்​தால் நம் நாட்​டுக்கே தண்​ணீர் பிரச்​சினை இருக்​காது. நாட்​டில் விவ​சாய​மும் செழித்​தோங்​கும்.

குண்​டூர் குடிநீர் கால்​வாய் திட்​டத்​துக்கு இம்​மாத இறு​தி​யில் அடிக்கல் நாட்​டப்​படும். போல​வரம் இடது கால்​வாய் திட்​டப்​பணிகள் நிறைவடைந்​தது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதி, அனகாபல்லி​யில் கோதாவரி நீருக்கு ஜல ஆரத்தி எடுக்கப்படும். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT