அசோக் பாஹர்

 
இந்தியா

மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசம் லக்னோ​வில் 71 வயது முதியவர் ஒருவர் நீட் தேர்வுக்கு விண்​ணப்​பித்து தேர்வு எழு​தி​யுள்​ளார்.

உத்தர பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​தவர் அசோக் பாஹர்​(71). உத்​த​ராகண்​டில் உள்ள இந்​திய மருந்​துள் நிறு​வனத்​தில் (ஐடிபிஎல்) மார்க்​கெட்​டிங் பிரிவு தலை​வ​ராக​வும், வெளி​யுறவுத்​துறை​யில் ஆலோ​சக​ராக​வும் பணி​யாற்றி விருப்ப ஓய்வு பெற்​றுள்​ளார். இவரது மனைவி டாக்​டர். மஞ்சு பாஹர் மகப்​பேறு மருத்​து​வர்.

அசோக் பாஹரின் தந்​தை​யும் லக்​னோ​வில் பிரபல மருத்​து​வ​ராக இருந்​தவர். அதனால் இவரும் மருத்​து​வ​ராக வேண்​டும் என இவரது தாய் விரும்​பி​யுள்​ளார். ஆனால், மருத்​துவக் கல்​லூரி நுழைவுத் தேர்​வு​களில் இவரால் வெற்றி பெற முடிய​வில்​லை. இவரது குடும்ப உறுப்​பினர்​கள் மற்​றும் உறவினர்​கள் சுமார் 20 பேர் மருத்துவர்களாக உள்​ளனர். பலர் வெளி​நாடு​களில் பணியாற்றுகின்​றனர்.

அதனால் தனது மருத்​து​வர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழு​தி​யுள்​ளார் அசோக் பாஹர். இவர் மருத்​து​வ​ராகி ஹெபடாலஜி படிப்பை முடித்து கல்​லீரல் நோய் நிபுண​ராக வேண்டும் என விரும்​பு​கிறார். 71 வயதில் இவர் நீட் தேர்வு எழுதும் செய்தி சமூக ஊடகங்​களில் வேக​மாக பரவியது.

பலர் இவரது முயற்​சியை ஊக்​கு​வித்​தா​லும், சிலர் இந்த வயதில் மருத்​துவப் படிப்​பது வீண், காலம் கடந்த செயல் என்​றும் மற்றொரு​வரின் மருத்​து​வர் சீட் வாய்ப்பை கெடுப்​பது போன்​றது எனவும் தங்​கள் கருத்​துக்​களை பதிவு செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT