இந்தியா

ஆந்திர தலைநகராக அமராவதி நகரம் உருவாக விவசாயிகளின் தியாகம் உன்னதமானது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

என். மகேஷ்குமார்

அமராவதி: ஆந்​திர மாநில தலைநக​ரான அமராவ​தி​யில் தூளூரு பகு​தி​யில் நேற்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் 15 அரசு வங்​கி​கள், எல்​ஐசி, தபால் நிலை​யம் உள்​ளிட்ட அரசு சார்ந்த அலு​வலக கட்​டிடங்​களுக்கு அடிக்​கல் நாட்​டும் விழா​வில் பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

ஆந்​திர தலைநகர் பணி​களை மீண்​டும் தொடங்​கு​வது ஒரு யாகம் போன்​ற​தாகும். புதிய தலைநகரை உரு​வாக்​கு​வது என்​பது சாதாரண விஷ​யம் அல்ல. ஒரே இடத்​தில் அரசு வங்​கி​கள், இன்​சூரன்ஸ் நிறு​வனங்​கள் இருப்​பது அரிது.

வருங்​காலங்​களில் ஒரு தலைநகரை உரு​வாக்க வேண்​டுமெனில், அமராவ​தியை உதா​ரண​மாக காட்​டலாம். தலைநகரம் உரு​வாக தங்​களின் விவ​சாய நிலத்தை அரசுக்கு வழங்​கிய விவ​சா​யிகளின் தியாகம் மிக​வும் உன்​னத​மானது.

அது​போன்ற விவ​சா​யிகளுக்கு சேவை புரிவது இங்​குள்ள வங்​கி​களின் கடமை. விவ​சா​யிகள் உற்​பத்தி செய்த பொருட்​களை கொண்டு செல்ல சிறப்பு ரயில்​கள் வர உள்​ளன.

மகா​ராஷ்டி​ரா​வில் இருந்து வாழைக்​கா​யும், தமிழகத்​தில் இருந்து தேங்​கா​யும் சரக்கு ரயில்​களில் கொண்டு செல்​லப்​படு​கின்​றன. இதே​போன்​று, காய்​கறிகள், பழங்​களுக்கு ஆந்​தி​ராவை ஒரு மைய​மாக உரு​வாக்​கி, இங்​கிருந்து இவை ரயில் போக்​கு​வரத்து மூலம் நாடு முழு​வதும் விநி​யோகம் செய்ய முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஒரு அரு​மை​யான திட்​டத்தை தீட்​டி​யுள்​ளார். இதற்கு வங்​கி​கள் முதலில் ஒத்​துழைக்க வேண்​டும்.

நினைத்​த​படியே அமராவதி தலைநகரம் வளர்ச்சி பெற வேண்​டுமென பிராத்​திக்​கிறேன். இவ்​வாறு மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​னார்.

SCROLL FOR NEXT