இந்தியா

ம.பி., கேரளா, சத்தீஸ்கர், அந்தமானில் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ம.பி., கேரளா, சத்தீஸ்கர், அந்தமானில் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்​நாடு, கேரளா, மத்​திய பிரதேசம், புதுச்​சேரி, அந்​த​மான் நிக்​கோபர் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) கடந்த நவம்​பர் மாதம் தொடங்​கியது. இதில் தமிழ்​நாடு, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் ஏற்​கெனவே வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது.

இந்​நிலை​யில், 4 மாநிலங்​களில் வரைவு வாக்​காளர் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்​டது. இதில் சுமார் 95 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் மத்​திய பிரதேசத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் (8.46 லட்​சம்), முகவரி மாறிய​வர்​கள் (22.78 லட்​சம்) உட்பட 42,74,160 பேர் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இது​போல கேரளா​வில் உயி​ரிழந்​தவர்​கள் (6.49 லட்​சம்), முகவரி மாறிய​வர்​கள் (8.16 லட்​சம்) உட்பட 24.08 லட்​சம் பேர் நீக்​கப்​பட்​டு உள்​ளனர்.

சத்​தீஸ்​கரில் 27.34 லட்​சம் பேர் நீக்​கப்​பட்​டு உள்​ளனர். அந்​த​மான் நிக்​கோபர் தீவு​கள் யூனியன் பிரதேசத்​தில் மொத்​தம் உள்ள 3.1 லட்​சம் வாக்​காளர்​களில் 64 ஆயிரம் பேர் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

ஜனவரி 22-க்குள்: இந்​தப் பட்​டியலில் விடு​பட்​ட​வர்​கள் வரும் ஜனவரி 22-ம் தேதிக்​குள் உரிய ஆவணங்​களு​டன் விண்​ணப்​பிக்க வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இறுதி வாக்​காளர் பட்​டியல் பிப்​ர​வரி மாதம் வெளி​யிடப்​படும்​ எனத்​ தெரிகிறது.

SCROLL FOR NEXT