பிரம்மாண்ட நாளந்தா பல்கலைக்கழகம்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு சசி தரூர் புகழாரம்

பிரம்மாண்ட நாளந்தா பல்கலைக்கழகம்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு சசி தரூர் புகழாரம்
Updated on
1 min read

பாட்னா: நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்க உதவிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்​டில் பிஹார் சட்​டப்​பேர​வை​யில் உரை​யாற்​றிய அப்​போதைய குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாம், நாளந்தா பல்​கலைக்​கழகத்தை மீண்​டும் கட்டி எழுப்ப வேண்​டும் என்று வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து பிஹார் அரசு சார்​பில் ராஜ்கிர் பகு​தி​யில் 455 ஏக்​கர் நிலம் ஒதுக்​கப்​பட்​டது. அங்கு கடந்த 2016-ம் ஆண்​டில் கட்​டு​மான பணி​கள் தொடங்​கின. குறிப்​பாக மத்​திய வெளி​யுறவுத் துறை சார்​பில் ரூ.2,717.10 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது.

மேலும் மத்​திய வெளி​யுறவுத் துறை​யின் முயற்​சி​யால் சீனா, தாய்​லாந்​து, ஆஸ்​திரேலி​யா, ஜப்​பான் உட்பட 17 நாடு​களில் இருந்து நிதி திரட்​டப்​பட்​டது. இதன்​மூலம் நாளந்தா பல்​கலைக்​கழகம் பிரம்​மாண்​ட​மாக கட்டி முடிக்​கப்​பட்​டது. இது கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

தற்​போது நாளந்தா பல்​கலைக்​கழகத்​தில் இலக்​கிய திரு​விழா நடை​பெறுகிறது. இதில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் பங்​கேற்று உள்​ளார். அவர் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “பிரம்​மாண்​ட​மான நாளந்தா பல்​கலைக்​கழகம் பிரமிப்​பூட்​டு​கிறது. இதற்​காக மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் மற்​றும் இந்​திய வெளி​யுறவுத் துறையை மனதா​ரப்​ பா​ராட்​டு​கிறேன்​’’ என்​று தெரிவித்​துள்​ளார்​.

பிரம்மாண்ட நாளந்தா பல்கலைக்கழகம்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு சசி தரூர் புகழாரம்
ஒடிசா மாநிலத்தில் 22 மாவோயிஸ்ட்கள் சரண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in