போபால்: மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டம் நல்கேதாவில் உள்ள மா பாகலாமுகி கோயில் அருகே உள்ள ஒரு நீரோடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது. அப்போது அந்த நீரோடையை கடக்க முயன்ற ஒரு கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நீரோடையில் சிக்கியிருந்த கார் வெளியே இழுக்கப்பட்டது. அதில் இருந்த 8 பேரை மீட்டு அருகில் உள்ள
ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 8 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.