இந்தியா

இந்திய எல்லைப் பகுதிகளில் இன மோதல்களை தூண்ட கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்த 7 வெளிநாட்டினர் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய எல்​லைப் பகு​தி​களில் இன மோதல்​களை தூண்​டும் வகை​யில் மியான்​மர் கிளர்ச்​சி​யாளர்​களுக்கு பயிற்சி அளித்த வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புல​வ​னாய்வு முகமை (என்​ஐஏ) அதி​காரி​கள் கைது செய்​துள்​ளனர்.

பாட்​டி​யாலா ஹவுஸ் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நேற்​று ​முன்​தினம் ஆஜர்​படுத்​தப்​பட்ட அவர்​களை மார்ச் 27ம் தேதி வரை என்ஐஏ காவலில் எடுத்து விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

இது குறித்து என்ஐஏ அதி​காரி​கள் கூறிய​தாவது: பிடிபட்​ட​வர்​களில் 6 பேர் உக்​ரைனை சேர்ந்​தவர்​கள், ஒரு​வர் அமெரிக்​கர். இவர்​கள் மியான்​மரில் உள்ள கிளர்ச்​சி​யாளர்​களுக்கு பயிற்சி அளித்து எல்லை​யில் இன மோதல்​களை தூண்ட திட்​ட​மிட்​டிருந்​தனர். டெல்லி, லக்னோ மற்​றும் கொல்​கத்தா ஆகிய நகரங்​களில் இருந்து இந்த 7 பேரும் கைது செய்​யப்​பட்​டனர்.

          

இவர்​கள் முறை​யான விசா மூலம் இந்​தியா வந்​தடைந்​தா​லும், பாது​காக்​கப்​பட்ட பகு​தி​யான மிசோர​முக்கு செல்​லத் தேவை​யான முறை​யான அனு​ம​தி​யைப் பெறாமல் அங்கு சென்​றுள்​ளனர். அங்கிருந்து எல்லை தாண்டி மியான்​மருக்​குள் நுழைந்​து, அங்குள்ள இனவாத ஆயுதக் குழுக்​களு​டன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

மேலும், இவர்​கள் ஐரோப்​பா​வில் இருந்து பெரு​மளவி​லான அதிநவீன ட்ரோன்​களை இந்​தியா வழி​யாக கடத்​திச் சென்றுள்ளனர். இந்​தி​யா​விலுள்ள பிரி​வினை​வாதக் குழுக்​களு​டன் தொடர்​புடைய மியான்​மர் கிளர்ச்​சி​யாளர்​களுக்கு இவர்​கள் போர்ப் பயிற்சி அளித்​ததும் விசா​ரணை​யில் அம்​பல​மானது.

கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் மீது சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தடுப்​புச் சட்​டத்​தின் 18-வது பிரி​வின் கீழ் வழக்​குப் பதிவு செய்யப்பட்​டுள்​ளது. இவர்​களுக்​குப் பின்​னால் இருக்​கும் வெளிநாட்​டுச் சக்​தி​கள் குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு என்​ஐஏ அதி​காரி​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT