இந்தியா

திருப்பதியில் குடோனில் பதுக்கிய 665 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

என். மகேஷ்குமார்

திருப்பதி: நாடு முழு​வதும் வர்த்தக சிலிண்​டர்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. அமெரிக்கா - ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள இந்த நிலைமையை சரி செய்ய மத்​திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று திருப்​பதி அடுத்​துள்ள திருச்​சானூர் - எம்​.ஆர் பல்லி சாலை​யில் ஒரு குடோனில் வர்த்தக சிலிண்​டர்​கள் பதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக சிவில் சப்ளை அதி​காரி​களுக்கு தகவல் வந்​தது.

          

அதன்​பேரில் அவர்​கள் நேற்று மாலை 7 மணி​யள​வில் அந்த குடோனுக்கு ஆய்வு நடத்த சென்​றனர். இவர்​களை கண்​டதும் பிரம்மா ரெட்டி எனும் உரிமை​யாளர் அங்​கிருந்து தப்பி ஓடி​விட்​டார். பின்​னர் அங்கு அதி​காரி​கள் சோதனை​யிட்டு 585 வர்த்தக சிலிண்​டர்​கள், 80 வீட்டு சிலிண்​டர்​களை பறி​முதல் செய்​தனர்.

பாரத் காஸ் உரிமம் இந்த குடோனுக்கு கடந்த 2019-ல் காலா​வதி ஆகி விட்​டாலும், தொடர்ந்து அங்கு தனி​யார் சிலிண்​டர் வியா​பாரம் ரகசி​யாக நடந்து வந்​துள்​ளது. இங்​கிருந்து திருப்​ப​திக்கு மட்​டுமல்​லாமல் திரு​மலைக்கு ‘கோ காஸ்’ எனும் பெயரில் நிபந்​தனை​களை மீறி அனுப்​பப்​பட்டு வந்​​துள்​ளது.

இந்த குடோனை நடத்தி வந்​தவர் முன்​னாள் திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலரும், திருப்​பதி எம்​.எல்​.ஏவு​மான கருணாகர் ரெட்​டி​யின் ஆதர​வாளர் என்​பது தெரிய​வந்​துள்​ளது. இது குறித்து போலீ​ஸார் வி​சாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT