இந்தியா

தெலங்கானாவில் 37 நக்சலைட்கள் சரண்

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: வரும் மார்ச் மாத இறு​திக்​குள் நக்​சலைட்​கள் அனை​வரும் ஆயுதங்​களை கைவிட்​டு, போலீ​ஸில் சரண் அடைய வேண்​டும் என மத்​திய உள்​துறை அமைச்​சகம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதற்​காக கடந்த ஏப்​ரல் மாதம் 21-ம் தேதி முதல் ‘ஆபரேஷன் ககார்’ அல்​லது ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் எனும் பெயர்​களில் நக்​சலிஸத்தை முற்​றி​லு​மாக ஒழிக்க மத்​திய பாது​காப்பு படைகளும், மாநிலங்​களின் ஆயுதப்​படை​யும் இணைந்து வனப்​பகு​தி​களில் பதுங்கி உள்ள நக்​சலைட்​களை கைது செய்​யும் நடவடிக்​கை​களில் ஈடு​பட்டு வரு​கிறன.

இதனால் நக்​சலைட்​களுக்​கும் போலீ​ஸாருக்​கும் இடையே நடை​பெறும் துப்​பாக்கி சண்​டை​யில் பலர் கொல்​லப்​பட்டு வரு​கின்​றனர்.

சமீபத்​தில் ஆந்​தி​ரா​வில் நடந்த துப்​பாக்கி சூட்​டில் 13 நக்​சலைட்​கள் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர். இந்​நிலை​யில் வனப்​பகு​தி​களில் பதுங்கி இருந்த 37 நக்​சலைட்​​கள் நேற்று ஹைத​ரா​பாத்​தில் தெலங்​கானா மாநில டிஜிபி சிவதர் ரெட்டி முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து சரண் அடைந்​தனர். இவர்​களில் 34 பேர் சத்​தீஸ்​கர் மாநிலத்தை சேர்ந்​தவர்​கள். 23 பேர் பெண்​கள். இவர்​கள் அனை​வருக்​கும் பொது​மன்​னிப்பு வழங்​கு​வதோடு, உடனடி உதவி​யின் கீழ் தலா ரூ.25,000 நிதி உதவி​யும்​ வழங்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT