இந்தியா

மத்​திய பிரதேசத்​தின் கோட்டையில் 3,000 கிலோ பீரங்கி திருட்டு

கிரேன், டிராக்டர் சகிதமாய் வந்து திருட்டு கும்பல் துணிகரம்

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய பிரதேசத்​தின் சிவபுரி மாவட்​டம், நார்​வார் நகரின் விந்​திய மலை​யில் பழங்​கால கோட்டை உள்​ளது. கடந்த 10-ம் நூற்​றாண்​டில் கச்​வஹா ராஜபுத்​திர மன்​னர்​கள் இந்த கோட்டையைக் கட்​டினர். 15-ம் நூற்​றாண்​டில் முகலாய மன்னர்கள் கோட்​டையைக் கைப்​பற்​றினர். 19-ம் நூற்​றாண்​டில் மராத்தா சிந்​தியா மன்​னர்​களின் கட்​டுப்​பாட்​டின் கீழ் கோட்டை வந்​தது. தற்​போது இந்​திய தொல்​லியல் துறை நார்​வார் கோட்டையைப் பராமரித்து வரு​கிறது.

இதில் கடந்த 16-ம் நூற்​றாண்டை சேர்ந்த 14 பீரங்​கி​கள் உள்​ளன. பித்​தளை, செம்​பு, வெண்​கலம் உள்​ளிட்ட உலோகங்​களால் தயாரிக்​கப்​பட்ட இந்த பீரங்​கி​கள் மிக​வும் அரிய​தாக கருதப்படுகிறது. ஒவ்​வொரு பீரங்​கி​யும் 5 அடி 10 அங்​குலம் நீளம், 30 அங்​குலம் அகலம் கொண்​ட​வை. இந்த பீரங்​கி​களில் பெர்​சிய, தேவ​நாகரி எழுத்​துகள் பொறிக்​கப்​பட்டு உள்​ளன. சர்​வ​தேச பழங்காலப் பொருட்​கள் சந்​தை​யில் நார்​வாரி கோட்டை பீரங்கிகளின் மதிப்பு தலா ரூ.5 கோடி என்று கூறப்​படு​கிறது.

கடந்த 15-ம் தேதி நள்​ளிர​வில் சுமார் 25 முதல் 30 திருடர்​கள் நார்வார் கோட்​டைக்​குள் ரகசி​ய​மாக புகுந்​துள்​ளனர். கோட்டையின் திறந்​தவெளி வளாகத்​தில் செங்​கல் தூணில் வைக்கப்​பட்​டிருந்த 3,000 கிலோ எடை கொண்ட ஒரு பீரங்​கியைத் திருடர்​கள் லாவக​மாக பெயர்த்து எடுத்து உள்​ளனர். நார்​வார் கோட்டை சுமார் 500 அடி உயரத்​தில் உள்​ளது. அங்​கிருந்து ஒரு இரும்பு டிராலி​யில் பீரங்​கியைக் கீழே கொண்டு வந்​துள்​ளனர். கோட்​டை​யின் அடி​வாரத்​தில் ஒரு லாரி மற்​றும் சிறிய ரக கிரேன் தயார் நிலை​யில் நிறுத்​தப்​பட்​டிருந்​தது. கிரேன் உதவி​யுடன் லாரியில் பீரங்கி ஏற்​றப்​பட்டு கடத்​திச் செல்​லப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து தொல்​லியல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: கடந்த 15-ம் தேதி நார்​வார் கோட்​டை​யில் 6 பாது​காவலர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். இதில் 2 இரவு நேர காவலர்​கள் கோட்​டை​யில் பாது​காப்​புப் பணியை மேற்​கொள்​ளாமல் வீட்​டுக்​குச் சென்று உள்ளனர். இதைப் பயன்​படுத்தி மர்ம நபர்​கள் கோட்​டை​யில் இருந்து ஒரு பீரங்​கியை எளி​தாக கடத்​திச் சென்று உள்​ளனர். சர்வதேச கும்​பலைச் சேர்ந்​தவர்​கள் கடத்​தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்​தேகிக்​கிறோம்.

இதுகுறித்து போலீ​ஸில் புகார் அளிக்​கப்​பட்டு உள்​ளது. கடத்தப்பட்ட பீரங்​கியை மீட்க போலீ​ஸார் தீவிர முயற்சி மேற்​கொண்டு வரு​கின்​றனர். இவ்​வாறு அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர். நார்​வார் காவல் துறை அதி​காரி வினய் யாதவ் கூறும்​போது, “பாதுகாவலர்​களின் கவனக் குறை​வால் திருட்டு நடை​பெற்று உள்​ளது. பீரங்​கியைத் திருடிய மர்ம நபர்களைத் தீவிர​மாக தேடி வரு​கிறோம்” என்று தெரி​வித்​தார்.

நார்​வார் பகுதி மக்​கள் கூறிய​தாவது: கடந்த 2007-ல் நார்​வார் கோட்​டை​யில் இருந்து சிறிய ரகத்​தைச் சேர்ந்த 2 பீரங்​கி​கள் திருடப்​பட்​டன. இதுதொடர்​பாக சிவபுரி மன்​னர் பரம்​பரையைச் சேர்ந்த ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டார். அவர் போலீ​ஸில் அளித்த வாக்​குமூலத்​தில், “நார்​வார் கோட்டை எங்​கள் குடும்ப சொத்​து. நான் திருட​வில்​லை. எனக்கு சொந்​த​மான பீரங்​கியை எடுத்​துச் சென்​றேன்” என்​றார்.

கடந்த 2007-ல் திருடப்​பட்ட சிறிய ரக பீரங்​கி​கள் இது​வரை கிடைக்​க​வில்​லை. கடந்த 2006-ல் மத்​திய பிரதேசத்​தின் கட்னி பகு​தி​யில் இருந்து 2,200 ஆண்டு பழமை​யான சுவாமி சிலை திருடப்​பட்​டது. பல ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்த சிலை அமெரிக்​கா​வின் நியூயார்க்​ நகர கிடங்​கில்​ மீட்​கப்​பட்​டது. தற்​போதும்​ சர்​வ​தேச கும்பலைச்​ சேர்​ந்​தவர்​கள்​ கோட்​டை​யில்​ இருந்​து பீரங்​கியைத்​ திருடி சென்​றிருக்​கலாம்​. இவ்​​வாறு அவர்கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT