கோப்புப்படம்

 
இந்தியா

ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு

செய்திப்பிரிவு

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் தற்​போது எங்கு பார்த்​தா​லும் பக்​தர்​களின் கூட்​ டம் காணப்​படு​கிறது. சுவாமியை தர்ம தரிசனம் வாயி​லாக தரிசிக்க 34 கம்​பார்ட்​மென்​டுகளும் நிரம்​பி, கோயிலுக்கு வெளியே நாராயணகிரியை தாண்​டி, சிலா தோரணம் வரை சுமார் 3 கி.மீ. தூரத்​திற்கு பக்​தர்​கள் காத்​திருக்​கின்​றனர்.

இதனால் தங்​கும் அறை​கள் கிடைக்​காமல் பக்​தர்​கள் அவதிப்​படு​கின்​றனர். தலை​முடி காணிக்கை செலுத்​தும் இடத்​தி​லும், அன்​ன​தான மையத்​தி​லும், தரிசன வரிசை​யிலும், லட்டு பிர​சாதம் வாங்​கு​வதற்​கும், காலண்​டர்​கள், டைரிகள் வாங்​க​வும் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோதுகிறது.

வரிசை​யில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு திருப்​பதி தேவஸ்​தானம் சார்​பில் உணவு, குடிநீர், டீ, காபி போன்​றவை வழங்​கப்​பட்டு வரு​கின்றன. மொபைல் குடிநீர் வாக​னம் மூலம் பக்​தர்​களுக்கு உடனுக்​குடன் குடிநீர் வழங்​கப்​படு​கிறது. நேற்று முதல் நாளை 29-ம் தேதி வரை திரு​மலை மற்​றும் திருப்​பதி விமான நிலை​யத்​தில் ​ஸ்ரீவாணி அறக்​கட்​டளை டிக்​கெட்​டு​கள் வழங்​கு​வதை தேவஸ்​தானம் நிறுத்​தி​ய​தால், பக்​தர்​கள் ஆர்ப்​பாட்​டம் செய்​தனர். அவர்​களை போலீ​ஸார் சமா​தானம் செய்து அனுப்​பினர்.

வைகுண்ட ஏகாதசிக்​கு, டிசம்​பர் 30, 31, மற்​றும் ஜனவரி 1-ம் தேதி டிக்​கெட்​டு​கள் உள்ள பக்​தர்​கள் மட்​டும் அதில் குறிப்​பிட்ட நேரத்​தில் தரிசனத்துக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT