இந்தியா

அருணாச்சலில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை உட்பட 19 சிறுவர், சிறுமிகள் மீட்பு

செய்திப்பிரிவு

இடாநகர்: வடகிழக்கு மாநிலங்​களில் சிறுவர்கள் கடத்தல் சம்பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இந்த சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் ஒரு கும்​பல் சிறு​வர், சிறுமிகளை விலைக்கு வாங்கி வெளி​மாநிலங்​களுக்கு கடத்த திட்​ட​மிட்டு இருப்​ப​தாக மாநில போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதன்​பேரில் தலைநகர் இடாநகர் மற்​றும் மெச்​சுக்​கா, ஆலோ, பாசி​காட், நஹர்​லாகுன், லாங்​டிங் உள்​ளிட்ட பகு​தி​களில் போலீஸார் சோதனை நடத்​தினர். அப்​போது 19 சிறு​வர், சிறுமியர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். இதில் 3 வயது குழந்​தை​யும் இருந்தது. பெரும்​பாலானோர் 8 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள் ஆவர். இதுதொடர்​பாக 3 பேர் கைது செய்யப்​பட்டு உள்​ளனர்.

மீட்​கப்​பட்ட சிறு​வர், சிறுமியர் அருணாச்சல பிரதேசத்​தின் நாம்​சாய் நகருக்கு அழைத்து வரப்​பட்​டு, அவர​வர் பெற்​றோர், உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “வறுமை​யில் வாடும் குடும்​பங்​களிடம் இருந்து ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பணம் கொடுத்து சிறு​வர், சிறுமிகளை கடத்​தல் கும்​பல் விலைக்கு வாங்கி உள்​ளது. சில சிறு​வர்​களை கடத்தி வந்​துள்​ளனர்.

இவர்களை வெளி​மாநிலங்​களுக்கு கடத்​திச் சென்று ஓட்​டல்​கள், தேயிலை தோட்​டங்​கள் மற்​றும் வீட்டு வேலைகளில் ஈடு​படுத்த அந்த கும்​பல் திட்​ட​மிட்​டிருந்​தது. அருணாச்சல பிரதேசத்​தின் பல்​வேறு பகு​தி​களை போலீ​ஸார் ஒன்​றிணைந்து செயல்​பட்டு 19 பேரை மீட்டுள்​ளோம்” என்​றனர்.

SCROLL FOR NEXT