இந்தியா

எம்எல்ஏ.க்களை தொடர்ந்து மம்தா பானர்ஜிக்கு எதிராக 16 திரிணமூல் எம்.பி.க்கள் போர்க்கொடி

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: தேர்​தல் தோல்​வியை அடுத்து திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யில் பெரும்​பான்மை எம்​எல்​ஏ.க்​கள் மம்தா பானர்​ஜிக்கு எதி​ராக போர்க்​கொடி தூக்கி தனி அணி​யாக பிரிந்தனர். இந்​நிலை​யில் திரிண​மூல் எம்​.பி.க்​கள் 16 பேர், மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரியை நேற்று சந்​தித்​தனர்.

மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் வெறும் 80 இடங்​களில் மட்​டுமே வென்று ஆட்​சியை இழந்​தது. தேர்தல் தோல்விக்​குப் ​பின் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் பிளவு ஏற்பட ஆரம்​பித்​தது. 59 எம்​எல்​ஏக்​கள் மம்​தாவுக்கு எதி​ராக போர்க்கொடி தூக்கி தனி அணி​யாக உரு​வா​கினர். பெரும்​பான்மை அடிப்​படை​யில் அவர்​களில் ரிதப்​ரதா பானர்ஜி என்​பவருக்கு எதிர்க்​கட்சி தலை​வர் அந்​தஸ்து வழங்​கப்​பட்​டது.

இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்​லி​யில் இருந்தார். அப்​போது திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 16 எம்.பி.க்​கள் சுகேந்து ரே மற்​றும் ககோலி தஸ்​திதர் தலை​மை​யில் மாநில முதல்​வர் சுவேந்து அதி​காரியை நேற்று சந்​தித்​தனர். இந்த சந்​திப்பு பாஜக அமைச்​சர் ஒரு​வர் வீட்​டில் நடை​பெற்​றது.

இவர்​கள் தங்​களை தனி அணி​யாக மக்​களவை​யில் அமர வைக்கும்​படி மக்​களவை சபா​நாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த 16 எம்​.பி.களில் சேகர் ராய் மட்​டும் மாநிலங்​களவை உறுப்பினர். மற்ற 15 பேரும் மக்​களவை உறுப்பினர்கள். பெரும்​பான்மை அடிப்​படை​யில் தனி அணி​யாக உரு​வாக 19 மக்​களவை உறுப்​பினர்​கள் தேவை. இல்லையென்றால் கட்சி தாவல் நடவடிக்​கையை சந்​திக்க நேரிடும்.

திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் ஏற்​கெனவே 23 எம்​.பி.க்​கள் அதிருப்தி எம்​.எல்​.ஏ.க்​களு​டன் தொடர்​பில் இருந்​தனர். இதனால் இவர்​கள் தனி அணி​யாக உரு​வாக வாய்ப்​புள்​ளது. அவ்​வாறு தனி அணி​யாக உரு​வா​னால் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதி என கூறப்​படு​கிறது.

சுகேந்து சேகர் ராஜினாமா: இந்​நிலை​யில் திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யின் மாநிலங்​களவை எம்​.பி சுகேந்து சேகர் ராய் நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். மம்தா பானர்ஜி தலை​மையி​லான அரசு ஊழலிலும், பெண்​களுக்கு எதி​ரான வன்​முறை​களி​லும் ஈடு​பட்​ட​தாக அவர் குற்​றம் சாட்​டி​னார். ஆர்​.ஜி கர் மருத்​து​வ​மனை பாலியல் வன்​கொடுமை கொலை சம்​பவத்​தில் தடயங்​கள் அழிக்​கப்​பட்​ட​தில் போலீஸ் அதி​காரி​களின் பங்கு குறித்து வி​சா​ரணை நடத்த கோரிய​தால், தான் கட்​சி​யில்​ தனிமைப்​படுத்​தப்​பட்​ட​தாக அவர்​ கூறி​னார்​.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு: திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 28 எம்.பி.க்கள் தே.ஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் எம்.பி. ககோலி கோஷ் தாஸ்திதார் என்பவர் கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

அதிருப்தியில் இருக்கும் அவர் கூறுகையில், "திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். அதனால் நாங்கள் தே.ஜ.கூட்டணியுடன் இருந்தால் தான் நல்லது. எங்களின் விருப்பத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையாக தெரிவிக்க சுமார் 20 எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளோம்" என்றார்.

மற்றொரு அதிருப்தி பெண் எம்.பி.சர்மிளா சர்கார் கூறுகையில், "நாங்கள் 20 எம்.பி.க்கள் சேர்ந்து தனி அணியாக தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளோம். ககோலி கோஷ்தான் எங்கள் தலைமை கொறடா. சதாப்தி ராய் எங்களின் துணைத் தலைவர்" என்றார்.

SCROLL FOR NEXT