இந்தியா

கிர்கிஸ்தானில் அடிமைகளாக தவிக்கும் 12 இந்தியர்கள்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்​தின் பிலிபித் பகு​தியை சேர்ந்த 12 பேர், சில மாதங்​களுக்கு முன்பு வேலைக்​காக கிர்​கிஸ்​தான் நாட்​டுக்கு சென்​றனர்.

அங்கு சென்ற பிறகு திறந்​தவெளி​யில் தங்க வைக்​கப்​பட்டுள்​ளனர். அதோடு 3 வேளை​யும் போது​மான உணவு வகைகளும் வழங்​க​வில்​லை. இதனால் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்ப கோரிக்கை விடுத்​தனர். ஆத்​திரமடைந்த கிர்​கிஸ்​தான் ஒப்​பந்​த​தா​ரர்​கள், இந்​திய தொழிலா​ளர்​களை அடித்து உதைத்து அவர்​களின் பாஸ்​போர்ட்டை பறித்து வைத்து கொண்​டனர்.

இதுதொடர்​பாக சமூக வலை​தளம் மூல​மாக உத்தர பிரதேசத்​தில் உள்ள உறவினர்​களுக்கு இந்​திய தொழிலா​ளர்​கள் வீடியோ அனுப்​பினர். புகாரின் அடிப்படையில் மத்​திய வெளி​யுறவு அமைச்சகம் இந்​திய தொழிலா​ளர்​களை விரை​வில் மீட்கும் என்று உத்தர பிரதேச அரசு அதி​காரி​கள்​ உறு​தி அளித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT