வினேஷ் சந்​தேல்

 
இந்தியா

ரூ.50 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: ஐ-பேக் நிறுவன இயக்குநருக்கு 10 நாள் காவல்

அமலாக்கத் துறை கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசி​யல் ஆலோ​சனை வழங்கும் ஐ-பேக் நிறுவனத்தில் ரூ.50 கோடி அளவுக்கு சட்​ட​விரோத பணப் பரிமாற்றம் நடந்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்து ஐ-பேக் நிறுவன இயக்​குநர் வினேஷ் சந்​தேலை 10 நாள் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் காவலில் வைத்து விசா​ரிக்க அனு​மதி வழங்கப்பட்டுள்​ளது.

அரசி​யல் கட்​சிக்கு ஆலோ​சனை வழங்​க​வும், தேர்​தல் நேரத்​தில் வழி நடத்​த​வும் ஐ-பேக் அரசி​யல் ஆலோ​சனை நிறு​வனம் இயங்கி வரு​கிறது. இந்த ஐ-பேக் நிறு​வனத்​தின் இணை நிறு​வன​ராக​வும், இயக்​குந​ராக​வும் இருப்​பவர் வினேஷ் சந்​தேல். இந்​நிலை​யில் அண்​மை​யில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள், ஐ-பேக் நிறுவனத்தின் மீது ஒரு வழக்​குப் பதிவு செய்​தனர். அதில் ரூ.50 கோடி அளவுக்கு சட்​ட​விரோதப் பணப்​பரி​மாற்​றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்​பட்​டுள்​ளது.

          

இதையடுத்து நிறு​வனத்​தில் 33 சதவீத பங்​கு​களை வைத்​துள்ள வினேஷ் சந்​தேலை அமலாக்​கத்​ துறை அதி​காரி​கள் கைது செய்தனர். அவர் மீது சட்​ட​விரோத பணப் ​பரி​மாற்ற தடைச் சட்டத்​தின் ​(பிஎம்​எல்ஏ) கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு டெல்லி பாட்​டி​யாலா ஹவுஸ் நீதி​மன்ற வளாகத்​தில் கூடு​தல் செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் ஆஜர்​படுத்​தினர்.

வழக்கை விசா​ரித்த கூடு​தல் செஷன்ஸ் நீதி​மன்ற நீதிபதி ஷெபாலி பர்​னாலா, வினேஷ் சந்​தேலை 10 நாள் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் காவலில் வைத்து விசா​ரிக்க அனு​மதி அளித்தார். இந்​நிலை​யில் இந்த வழக்கு அரசி​யல் உள் ​நோக்​கம் கொண்​டது என்று வினேஷ் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​ விகாஸ்​ பஹ்​வா தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT