சென்னை: சூரியக் குடும்பத்தில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர் கோட்டில் இன்று (பிப்.28) மாலை 6.30 முதல் 8.30 வரை தென்பட உள்ளன.
இந்நிகழ்வை சூரியன் மறைந்த பின் தென்மேற்கு திசையில் பார்க்க வேண்டும். இதில் வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றை பார்க்கலாம்.
நெப்டியூன், யுரேனஸை தொலை நோக்கிகளால் மட்டுமே காணமுடியும். அறிவியல் அமைப்புகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.