கொடைக்கானலில் புல்வெளியில் படர்ந்துள்ள உறைபனி.

 
சுற்றுச்சூழல்

கொடைக்கானல் மலைப் பகுதியில் நிலவும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் கடும் குளிர்

செய்திப்பிரிவு

பழநி: கொடைக்கானலில் நேற்று குறைந்​த​பட்​ச​மாக 4 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை பதி​வானது. வழக்​க​மாக கொடைக்​கானலில் டிசம்​பர் முதல் பிப்​ர​வரி வரை உறைபனிக்​காலம் நில​வும்.

கடந்த ஒரு மாத​மாக இரவு முதல் அதி​காலை வரை 5 முதல் 7 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை​யும், பகலில் 11 முதல் 17 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை​யும் பதி​வாகி​யுள்​ளது.

          

அதி​காலை​யில் புல்​வெளி​கள், திறந்​தவெளி​யில் நிறுத்​தப்​படும் வாக​னங்​கள் மீது உறை பனி படர்ந்து ‘காஷ்மீர்’ போல காட்​சி​யளிக்​கிறது. இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 4 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை மட்​டுமே பதி​வானது. இது கொடைக்​கானலின் 10-வது மிகக் குளி​ரான நாளாகும் என்று ‘தமிழ்​நாடு வெதர்​மேன்’ என்று அழைக்​கப்​படும் வானிலை ஆய்​வாளர் பிரதீப் ஜான் தெரி​வித்​துள்​ளார்.

அவர் தனது சமூக வலை​தளப் பதி​வில், “பல ஆண்​டு​களுக்​குப் பிறகு மாநிலம் முழு​வதும் கடும் குளிர் நில​வு​கிறது. ஜன.21-ம் தேதி (நேற்​று) கொடைக்​கானலில் 4 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை நில​வியது.

இது கடந்த 5 ஆண்​டு​களில், கொடைக்​கானலில் ஜனவரி மாதத்​தில் பதி​வான 10-வது மிகக் குளி​ரான நாளாகும். நடப்​பாண்​டில் முதல்​முறை​யாக கடந்த 8-ம் தேதி 3.4 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை​யும், 2-வது முறை​யாக நேற்று 4 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை​யும் பதி​வாகி​யுள்​ளது.

மிகக் குளி​ரான நாளாக முதலிடத்​தில் 2003 ஜன. 5-ம் தேதி உள்​ளது. அன்று 0.6 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை பதி​வாகி​யுள்​ளது. தென்​னிந்​தி​யா​வில் உள்ள மலை​வாசஸ்​தலங்​களில் நேற்று கொடைக்​கானலில்​தான் மிகக் குறைந்த வெப்​பநிலை பதி​வாகி​யுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT