குன்னூர் அருகே ரன்னிமேடு பகுதியில் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த யானைகள்.
குன்னூர்: குன்னூர் அருகே மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
இதனால், நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம்மலைப்பாதையில் யானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளன.
ஊட்டி மலை ரயில் செல்லும் பாதையில், குன்னூர் ரன்னிமேடு அருகே ரயில் தண்டவாளங்களில் 11 யானைகள் நேற்று முகாமிட்டு இருந்தன.
இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறையினர், யானைகளை சமவெளிப் பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அவை
மீண்டும் தண்டவாளப்பகுதிக்கு வர விடாமல், வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.