கல்வி

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: அரையாண்டு விடுமுறை இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்வு விடு​முறை இன்று தொடங்​கு​கிறது.

தமிழகத்​தில் பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்தை பின்​பற்​றும் அனைத்து வித​மான பள்​ளி​களிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரை​யாண்டு, 2-ம் பரு​வத் தேர்வு கடந்த டிச. 10-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் நிறைவு​பெற்​றது. தொடர்ந்து மாணவர்​களுக்​கான அரை​யாண்டு விடு​முறை இன்று (டிச.24) தொடங்கி ஜன. 4-ம் தேதி வரை அறிவிக்கப்பட்​டுள்​ளது. விடுப்பு முடிந்து பள்​ளி​கள் மீண்​டும் ஜன.5-ல் திறக்​கப்பட உள்​ளன.

விடு​முறை தினங்​களில் எவ்​வித சிறப்பு வகுப்​பு​களும் நடத்​தக் ​கூ​டாது என்று பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்ளது. இதுதொடர்​பாக பள்ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

‘அரசு, அரசு உதவி பெறும் மற்​றும் தனி​யார் பள்​ளி​களுக்கு தற்​போது அரை​யாண்​டுத் தேர்வு விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது. மீண்​டும் பள்​ளி​கள் ஜன.5-ல் திறக்​கப்​படும். இந்த விடு​முறை நாட்​களில் மாணவர்​களுக்கு சிறப்பு வகுப்​பு​கள் நடத்​தக்​கூ​டாது.

அதே​போல், விடு​முறை நாட்​களில் கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்​நிலைகளில் மாணவர்​கள் குளிப்​ப​தற்கு பெற்​றோர் அனு​ம​திக்க வேண்​டாம். மாணவர்​களின் வளர்ச்​சிக்கு சத்​தான

உணவு தரு​வது அவசி​யம். இசை, நடனம், ஒவி​யம் ஆகிய​வற்​றில் ஆர்​வ​முள்ள மாணவர்​களை விடு​முறை நாட்​களில் இவற்றை கற்​றுக் கொள்ள வாய்ப்பு ஏற்​படுத்தி தரவேண்​டும்.

மேலும், தாத்​தா, பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவருந்​த​வும் ஊக்​குவிக்க வேண்டும். இத்​தகைய அறி​வுரைகளை பெற்​றோர் கவனத்​துக்கு பள்ளிகளின் தலை​மையாசிரியர்​கள் கொண்டு செல்ல வேண்​டும்​. இவ்​வாறு​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT