கல்வி

கற்றல் திறனை மேம்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் தனி செயல்திட்டம் உருவாக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025-2026-ம் கல்வியாண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி பள்ளிகள் வாரியான பகுப்பாய்வு அறிக்கை எமிஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதைக் கொண்டு மாணவர்களின் கற்றல் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டத்தை பள்ளிகள் உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT