கல்வி

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் எத்தனை? - பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யிடங்​களின் விவரங்​களை அனுப்​பக் கோரி பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்வி இணை இயக்​குநர் (பணி​யாளர் பிரிவு) அனைத்து மாவட்ட முதன்​மை கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை​: அரசு, நகராட்​சி, உயர் நிலை, மேல்நிலைப் பள்​ளி​களில் 31.5.2025 நில​வரப்​படி, அனைத்​துப் பாட பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் இடைநிலை ஆசிரியர்​களின் நிரப்​பத் தகுந்த காலிப்​பணி​யிடங்​களை மே 20-க்குள் பள்​ளிக்​கல்வி இயக்​குநர் அலு​வல​கத்​துக்கு அனுப்ப வேண்​டும்.

அவ்​வாறு காலிப் பணி​யிட விவரங்​களை அனுப்​பும்​போது 01.08.2025-ல் ஆசிரியர் இல்​லாமல் உபரி எனக் கண்​டறிந்து இயக்​குநரின் பொதுத் தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​படும் பணி​யிடங்​களை எக்​காரணத்​தைக் கொண்​டும் காலிப்​பணி​யிடங்​களாகக் கருதக் கூடாது.

அதே​போல், கூடு​தல் தேவை​யுள்ள பள்​ளி​களின் பெயர்​களை​யும் காலிப் பணி​யிடங்​களாகக் கருதக்​கூ​டாது என்று மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்.

மேலும், காலிப்​பணி​யிட விவரங்​களை உரிய படிவத்​தில் பூர்த்தி செய்து அனுப்​பும்​போது தற்​போதைய நில​வரப்​படி அப்​பள்​ளிக்கு பூர்த்தி செய்ய ஏது​வாக நிரப்​பத் தகுந்த காலி​யிடங்கள் என்​ப​தை​யும், இப்​பணியிடம் அப்​பள்​ளி​யில் ஐஎப்​எச்​ஆர்​எம்​-ல் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளதா என்​ப​தை​யும் உறுதி செய்த பின்​னரே படிவத்​தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்​டும்.

SCROLL FOR NEXT