கல்வி

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை உடனே பணி நிரவல் செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு உதவி பெறும் பள்​ளி​களில் உள்ள உபரி ஆசிரியர்​களை உடனடி​யாக பணிநிர​வல் செய்ய தொடக்​கக் கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து மாவட்​டக் கல்வி அதி​காரி​களுக்கு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​ய சுற்​றறிக்கை: அரசு நிதி​யுதவி பெறும் பள்​ளி​களில் நடப்பு (2025-26) கல்வி ஆண்​டில் பணி​யாளர் எண்​ணிக்கை நிர்​ண​யம் செய்​யும் பணி​கள் நடந்து வரு​கின்​றன. அதன்​படி, மாணவர் - ஆசிரியர் விகிதப்​படி கணக்​கிடப்​பட்​டு, அந்​தந்த மாவட்​டக் கல்வி அலு​வலர்​களால் ஒப்​புதல் பெறப்​பட்ட பட்​டியல்​கள் தயார் செய்​யப்​பட்​டுள்​ளன.

தனி​யார் பள்​ளிச் சட்​டம் மற்​றும் விதி​களின்​படி, குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் இந்த பணி​யாளர் நிர்ணய அறிக்​கைகளை பள்ளி நிர்​வாகங்​களுக்கு வழங்க வேண்​டும். தொடர்ந்து பள்​ளி​களில் உபரி பணி​யிடங்​கள் கண்​டறியப்​பட்​டால், உடனே பணிநிர​வல் அல்​லது மாற்​றுப் பணி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஆனால், மாவட்​டக் கல்வி அலு​வலர்​களிடம் இருந்து இது​வரை எந்த அறிக்​கை​யும் பெறப்​பட​வில்​லை.

உபரி ஆசிரியர்​களுக்​கான பணிநிர​வல் அல்​லது மாற்​றுப் பணி ஆணை​களை உடனே வழங்​கி, அதன் விவரங்​களை ஜன.23-க்​குள் இயக்​குநரகத்​துக்கு மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 1,200-க்​கும்மேற்​பட்டோர் உபரி​யாக இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT