கல்வி

புதிய வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: பு​திய வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்ட பின்​னரே பெற்​றோர் ஆசிரியர் கழகத்​துக்கு புதிய நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்பட வேண்​டும் என மாவட்ட முதன்மை கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்ட கல்வி அலு​வலர்​களுக்கு திடீர் உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகத்​தின் செயலர் ஏ.சத்​தி​ய​பா​மா, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக் ​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பெற்​றோர் ஆசிரியர் கழக விதி​முறை​களின்​படி பள்ளி பெற்​றோர் ஆசிரியர் கழகத்​தின் பதவிக் காலம் மூன்று ஆண்​டு​கள் ஆகும்.

மூன்று ஆண்​டு​களுக்​குப் பிறகு பொதுக்​குழுக் கூட்​டம் நடத்தி புதிய நிர்​வாகி​கள் தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டும். பள்ளி பெற்​றோர் ஆசிரியர் கழகம் உள்​ளிட்ட அனைத்து அமைப்​பு​களுக்​கு​மான வழி​காட்​டு​தல்​கள் புதுப்​பிக்​கப்பட உள்​ளன.

எனவே, மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகத்​தின் மூலம் திருத்​திய வழி​காட்​டு​தல்​களுக்​கான சுற்​றறிக்கை அனுப்​பப்​பட்ட பிறகு பள்ளி பெற்​றோர் ஆசிரியர் கழக அமைப்​புக்​கான புதிய நிர்​வாகி​களை தேர்ந்​தெடுக்​கும் நடை​முறை மேற்​கொள்​ளப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்ளார்​.

SCROLL FOR NEXT