கல்வி

குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியீடு: நவ.1-ல் முதல்நிலைத் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: குரூப்-2 தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி நேற்று இரவு வெளி​யிட்​டது.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஒருங்​கிணைந்த குரூப்-2 தேர்​வுக்​கான அறி​விப்பு வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தேர்​வர்​கள் ஆக. 11 முதல் செப்​டம்​பர் 9-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். முதல்​நிலைத் தேர்வு நவம்​பர் 1-ம் தேதி நடை​பெறும். கூடு​தல் விவரங்​களை தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) அறிந்​து​கொள்​லலாம். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

இந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மூல​மாக உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், சார் பதி​வாளர், சட்​டப் பேரவை உதவி பிரிவு அலு​வலர், சிறைத்​துறை அலு​வலர், நன்​னடத்தை அலு​வலர், கைத்​தறி ஆய்​வாளர்​,​முது​நிலை வரு​வாய் உதவி​யாளர், பேரூ​ராட்சி செயல் அலு​வலர் உள்​ளிட்ட பதவி​களில் 821 காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​பப்பட உள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது

SCROLL FOR NEXT