கல்வி

பொதுத்தேர்வில் நேர சலுகை குறித்து தேர்வுத் துறை விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனுப்​பிய சுற்​றறிக்கை: பொதுத்தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு வழக்​கத்​தை​விட கூடு​தலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம் அந்த மாணவர்​கள் கூடு​தல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்​படுத்த விரும்​ப​வில்லை எனில் அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.

          

அதாவது, வழக்​க​மான தேர்வு நேர​மான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதி​யம் 1.15 மணி வரை) முடிந்த பின்​னர் மாற்​றுத் திற​னாளி​கள் தங்​கள் விருப்​பத்​தின்​படி தேர்வு அறையை விட்​டுச் செல்​லலாம். அதற்​கான படிவத்​தில் பூர்த்​தி​செய்து கையொப்​பமிட வேண்​டும்.

அந்த படிவங்​களை தொகுத்து அனைத்து தேர்​வு​களும் முடிந்​ததும், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தேர்​வுத் துறை உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்க முதன்​மைக் கண்​காணிப்​பாளர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT