கல்வி

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தேதி மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்​நிலைத் தேர்வு தேதி மாற்​றப்​பட்​டுள்​ளது. துணை ஆட்​சி​யர், வணிக வரிஉதவி ஆணை​யர், கூட்​டுறவு சங்​கங்​களின் துணைப் பதி​வாளர், பதிவுத் துறை மாவட்​டப் பதி​வாளர், தொழிலா​ளர் நல உதவி ஆணை​யர் பதவி​களில் 28 காலி இடங்​களை நிரப்​புவதற்​காக குரூப்-1 தேர்​வுக்​கான அறி​விப்பு கடந்த ஜூன் 23-ம் தேதிவெளி​யிடப்​பட்​டது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 30-ல் தொடங்கி நடந்து வரு​கிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 29 ஆகும். முதல்​நிலைத் தேர்வு செப்​.6-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், தேர்வு தேதி மாற்​றப்​பட்​டுள்​ளது.

இத்​தேர்வு செப்​.27-க்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக டிஎன்பிஎஸ்சி செயலர் பனோத் ம்ரு​கேந்​தர் லால் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT