கல்வி

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு டாக்​டர் எம்ஜிஆர் பல்​கலைக்​கழகத்​தின் பொறுப்பு துணைவேந்​த​ராக எஸ்​.புஷ்கலா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். சென்​னை, கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் பல்​கலைக்​கழகம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது.

இப்​பல்​கலைக்​கழகத்​தின் 11-வது துணைவேந்​த​ராக மருத்​து​வர் கே.​நா​ராயண​சாமி கடந்த 2023-ம் ஆண்டு தமிழக ஆளுந​ரால் நியமிக்​கப்​பட்​டார். துணைவேந்​தரின் பதவிக் காலம் 3 ஆண்​டு​கள் ஆகும்.

இந்​நிலை​யில், நாராயண​சாமி​யின் பதவிக் காலம் கடந்த மே 31-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. இதையடுத்​து, பல்​கலைக்​கழகத்​தின் நோய் எதிர்ப்​பியல் துறைத் தலை​வர் மருத்​து​வர் எஸ்​.புஷ்கலாவை பொறுப்பு துணைவேந்​த​ராக செயல்பட மருத்​துவ பல்​கலைக் கழக ஆட்​சி மன்​றக்​குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

அதன்​படி, நேற்று அந்த பொறுப்பை அவர் ஏற்​றுக்கொண்​டார். புதிய துணைவேந்​தரை தேர்வு செய்ய அரசு தரப்​பில் தற்​போது தெரிவுக் குழு அமைக்​கப்பட வேண்​டும்.

அக்​குழு​வின் ஒருங்​கிணைப்​பாளரை அரசே நியமிக்க வேண்​டும். அதில், உறுப்​பினர்​களாக செயல்​பட, பல்​கலைக்​கழக ஆட்​சிமன்​றக் குழு சார்​பில், முன்​னாள் துணை வேந்​தர் மருத்​து​வர் சாந்​த​ராமன் முன்​மொழியப்​பட்​டுள்​ளார்.

செனட் குழு சார்​பில், நரம்​பியல் மருத்​து​வர் டாக்டர் கே.செல்​வகு​மார் உறுப்​பின​ராக உள்​ளார். அரசு சார்​பில் ஒருங்​கிணைப்​பாளர் நியமிக்​கப்​பட்​டதும், அக்​குழு​வினர், தகு​தி​யானவர்​களிடம் விண்​ணப்​பங்​களை பெற்று பரிசீலனை செய்​வார்​கள்.

குறைந்​த​பட்​சம் 3 பேரை பரிந்​துரை செய்து பல்​கலைக்​கழகத்​தின் வேந்​த​ரான ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்​பு​வார்​கள். அவர்​களில் ஒரு​வரை நேர்​முக தேர்வு மூலம் தேர்ந்​தெடுத்து துணைவேந்​த​ராக ஆளுநர் நியமிப்​பார்.

3 மாதங்​களுக்​குள் இந்த நடை​முறை​கள் நிறைவடைய வேண்​டும். அப்​படி இல்லை என்​றால், பல்​கலைக்​கழகத்தை நிர்​வகிக்க சிறப்பு குழுவை அரசு அமைக்​கலாம்​.

SCROLL FOR NEXT