கல்வி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது: முதல்முறையாக வாட்ஸ்அப் மூலம் அறியும் வசதி அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் இன்று காலை 9.30 மணிக்கு வெளி​யிடப்​படு​கிறது. முதல்​முறை​யாக வாட்​ஸ்​அப் மூலம் முடிவு​களை அறிந்​து​கொள்ள வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது. 3,412 மையங்​களில் 8.27 லட்​சம் மாணவ, மாணவி​கள் தேர்வு எழு​தினர்.

150-க்​கும் மேற்​பட்ட மையங்​களில் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் கடந்த ஏப்.6 முதல் ஏப்​.20-ம் தேதி வரை நடை​பெற்​றது. தொடர்ந்​து, தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான பணி​களை தேர்​வுத் துறை தீவிர​மாக மேற்​கொண்​டது.

இதற்​கிடையே, தமிழகத்​தில் புதிய அரசு அமைவ​தில் தாமதம் ஏற்​படு​வ​தா​லும், தேர்வு முடிவு​களுக்கு ஒப்​புதல் பெறாத​தா​லும், ஏற்​கெனவே அறி​வித்​த​படி மே 8-ம் தேதி தேர்வு முடிவு வெளி​யாகுமா என்ற சந்​தேகம் எழுந்​தது.

நிர்​வாக காரணங்​களால் முடிவு​களை வெளி​யிடும் தேதி தள்​ளிப்​போகலாம் என்​றும் கூறப்​பட்​டது. இந்​நிலை​யில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் திட்​ட​மிட்​டபடி இன்று வெளி​யிடப்பட உள்​ளது.

இதுகுறித்து அரசுத் தேர்​வு​கள் இயக்​குநர் க.சசிகலா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை நுங்​கம்​பாக்​கம் பேராசிரியர் அன்​பழகன் கல்வி வளாகத்​தில் உள்ள மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்​சி, பயிற்சி நிறு​வனக் கூட்​டரங்​கில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​கள் மே 8-ம் தேதி (இன்​று) காலை 9.30 மணிக்கு வெளி​யிடப்​படு​கிறது.

மாணவர்​கள் www.tnresults.nic.in மற்​றும் www.dge.tn.gov.in மற்​றும் results.digilocker.gov.in ஆகிய இணை​யதளங்​களில் தங்​களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய​வற்றை பதிவு செய்து தேர்வு முடிவு​களை அறிய​லாம்.

பள்ளி மாணவர்​கள் உறு​தி​மொழிப் படிவத்​தில் குறிப்​பிட்ட செல்​போன் எண் மற்​றும் தனித் தேர்​வர்​கள் இணை​ய​வழி​யில் விண்​ணப்​பித்​த​போது வழங்​கிய செல்​போன் எண்​ணுக்கு குறுஞ்​செய்தி மூல​மாக​வும் தேர்வு முடிவு​கள் அனுப்​பப்​படும்.

மேலும், இந்த ஆண்டு முதல்​முறை​யாக தமிழ்​நாடு மின்​ஆளுமை முகமை மூலம் வாட்​ஸ்​அப் செயலி​யில் தேர்வு முடிவு​களை அறிந்து கொள்​ளும் வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி,78452 52525 என்ற எண்​ணுக்கு வாட்​ஸ்​அப்​பில் ‘Hi’ என்று குறுந்​தகவல் அனுப்​பி, அடுத்​தடுத்து துறை பெயர், தேர்​வர்​களின் வகுப்​பு, தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய​வற்றை பதி​விட்​டு, தேர்வு முடிவு​களை அறிய​லாம்.

இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்​ளலாம். மாணவர்​கள் தேர்வு முடிவு​களை தைரி​யம், நம்​பிக்​கை​யுடன் எதிர்​கொள்ள வேண்​டும்.

தேர்ச்சி அடை​யாத மாணவர்​களுக்கு விரை​வில் துணைத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்​கப்​படும். பள்​ளி​கள் மூலம் சிறப்பு பயிற்​சி​யும் வழங்​கப்​படும். பெற்​றோர் தங்​கள் பிள்​ளை​களுக்கு பொறுமை​யுட​னும், அக்​கறை​யுட​னும், புரிதலுட​னும்​ துணைநிற்​க வேண்​டும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT