சபீக் ரஹ்​மான், ரவிச்​சந்​திரன்

 
க்ரைம்

ரூ.11.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கள்ள நோட்டுகளை கடத்திய பெண்

சர்வதேச கும்பல் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: திருச்சி ஒருங்கிணைந்த குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்​கு, சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில் கள்​ளநோட்​டு​கள்கைமாற இருப்​ப​தாக ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, திருச்சி ஒருங்கிணைந்த குற்​றப்​ பிரிவு போலீ​ஸார், சென்னை ஒருங்கிணைந்த குற்​றப்​பிரிவு போலீ​ஸார் இணைந்து நேற்​று​முன்​தினம் சோதனை நடத்​தினர்.

அப்​போது, விடுதி அறை​யில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த ரூ.11.90 லட்​சம் மதிப்​பிலான கள்​ளநோட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில்,கள்​ளநோட்​டு​களை பதுக்கி வைத்​திருந்​ததாகக் கூறப்படும் சென்​னை​யில் டிராவல்ஸ் நிறு​வனம் நடத்தி வரும் சபீக் ரஹ்​மான் (37) என்​பவரது வீட்​டில் போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

அப்​போது, ரூ.11.21 லட்​சம் அசல் இந்​திய ரூபாய் நோட்​டு​கள் மற்​றும் சுமார் ரூ.34 லட்​சம் மதிப்​புள்ள 25 ஆயிரம் யூரோ அசல் நோட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. பின்​னர், சபீக் ரஹ்​மான் கைது செய்​யப்​பட்டார்.

அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், இந்த கள்​ளநோட்​டு​கள் தஞ்சை மாவட்​டம், வெட்​டிக்​காடு பகு​தி​யைச் சேர்ந்த விவ​சாயி ரவிச்​சந்​திரன் (40) மூலம் கிடைத்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, தனிப்​படை போலீ​ஸார் ரவிச்​சந்​திரனை கைது செய்​தனர்.

அவரது வீட்​டில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.22.80 லட்​சம் அசல் பணம், 4 பாஸ்​போர்ட்​டுகள் மற்​றும் ரூ.9 ஆயிரம் மதிப்​பிலான கள்​ளநோட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

பின்​னர், அவரிடம் நடத்தப்பட்ட விசா​ரணை​யில், ரவிச்​சந்​திரன் கடந்த சில ஆண்​டு​களாக மலேசியாவில் பணி​யாற்​றிய போது, அங்​குள்ள கால்டாக்சி ஓட்​டுநர்​கள் மூலம் செயல்​பட்ட கள்​ளநோட்டு கும்​பலுடன் தொடர்பு ஏற்​படுத்​தி உள்ளார்.

பின்​னர், கமிஷன் அடிப்​படை​யில் கள்​ளநோட்​டு​களை இந்​தி​யா​வுக்கு கடத்தி விநி​யோகிக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. சென்னைக்கு வந்​த​போது டிராவல்ஸ் உரிமை​யாளர் சபீக் ரஹ்​மானுடன் பழக்​கம் ஏற்​பட்​டு, இரு​வரும் இணைந்து கள்​ளநோட்​டு​களை மாற்​றும் பணி​யில் ஈடு​பட்டு வந்​த​தாக விசா​ரணை​யில் தெரிய வந்தது.

சமீபத்​தில் மலேசி​யா​வில் செயல்​படும் கும்​பல், கள்​ள நோட்​டு​களை ஒரு பெண் மூலம் சென்​னைக்கு அனுப்பி வைத்த​தாக​வும், அந்த பெண் சபீக் ரஹ்​மானிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான கள்​ளநோட்​டு​களை ஒப்​படைத்​து​விட்டு சென்​ற​தாக​வும் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது.

அந்த பெண் யார் என்​பது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.இந்​த வழக்​கில்​, சர்​வ​தேச கள்​ளநோட்​டு கும்​பலின்​ தொடர்​பு இருப்​ப​தாக சந்​தேகம்​ உள்​ள​தால்​, சிபிசிஐடி போலீ​ஸாரும்​ வி​சா​ரணை​யை தொடங்​கி உள்​ளனர்​.

SCROLL FOR NEXT