மாதிரி படம்

 
க்ரைம்

ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணிடம் 20 பவுன் நகை கொள்ளை

செய்திப்பிரிவு

நாமக்கல்: ​நாமக்​கல் மாவட்​டம் ராசிபுரம் அருகே பட்​ட​ணம் அம்​மன்​கோ​வில் தோட்​டத்​தைச் சேர்ந்​தவர் கலைச்​செல்வி (58). கணவர் உயி​ரிழந்த நிலை​யில், இவர் மட்​டும் தனது தோட்​டத்து வீட்​டில் வசித்து வந்​தார். நேற்று முன்​தினம் இரவு வீட்​டுக்​குள் புகுந்த இரு மர்ம நபர்​கள் கலைச்​செல்​வி​யின் கழுத்​தில் கத்​தியை வைத்​தும், துப்​பாக்​கியைக் காட்டி​யும் அவர் அணிந்​திருந்த 5 பவுன் நகை மற்​றும் வீட்​டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.20,000 ரொக்​கத்​தைக் பறித்​துவிட்டு தப்​பினர். இதுதொடர்​பாக ராசிபுரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, மர்ம நபர்​களைத் தேடி வரு​கின்​றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT