க்ரைம்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பெண் உடல் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: மெரினா கடற்​கரை​யில் உள்ள அண்ணா சதுக்கம் பின்​புறம் கல்​லுக்​குட்டை என்ற பகுதி உள்​ளது. இந்த பகு​தி​யில் 35 வயது மதிக்​கத்​தக்க பெண் ஒரு​வரது சடலம் கிடப்​ப​தாக காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, அண்ணா சதுக்​கம் போலீ​ஸார் அங்கு விரைந்​தனர். அங்கு சுடி​தார் அணிந்த பெண் சடலம், தலை துண்​டிக்​கப்​பட்டு அழுகிய நிலை​யில் கிடந்​தது.

இதையடுத்து அந்த பெண்​ணின் சடலத்தை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு போலீ​ஸார் அனுப்பி வைத்​தனர்.

இறந்த பெண் யார், எந்த பகு​தி​யைச் சேர்ந்​தவர் என உடனடி​யாக தெரிய​வில்​லை.

அவர் தலை துண்​டித்து கொலை செய்​யப்​பட்டு கடலில் வீசப்​பட்​டாரா அல்​லது கடல் அலை​யில் சிக்கி உயி​ரிழந்து பாறை​களுக்கு இடையே சிக்கி தலை துண்​டானதா என போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

மேலும், தமிழகம் முழு​வதும் காணா​மல் போன பெண்​களில் விவரங்​களை பெற்றும் விசா​ரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT