புட்லூர் ஏவிஎம் நகர் பகுதியில் சியாமளா (55) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ராமு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமு வேலைக்கு சென்ற போது வீட்டில் தனியாக இருந்த சியாமளாவிடம் இளம்பெண் ஒருவர் சென்சஸ் எடுப்பதாக கூறி வந்துள்ளார்.
அந்த பெண்ணை சியாமளா வீட்டுக்குள் அழைத்து அவரிடம் பேசி கொண்டிருந்த போது திடீரென அந்த பெண் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சியாமளாவை தாக்கியுள்ளார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் சியாமளா உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, கதவை வெளிப் பக்கமாக பூட்டிவிட்டு கத்தி கூச் சலிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த பெண் புட்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த பவித்ரா என்பதும், கடன் பிரச்சினையை தீர்க்க இதுபோன்று செய்ததாகவும் தெரிந்தது. சியாமளர திருவள்ளுர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.