க்ரைம்

கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில் உள்ள வெப்​பாலம்​பட்டி சாலை​யோரத்​தில் நேற்று காலை 30 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் கொலை செய்​யப்​பட்​டு, உடல் எரிக்​கப்​பட்ட நிலை​யில் கிடந்​தது. அரை கிலோ மீட்​டர் தொலை​வில் கொடு​கூரில் அதே வயதுடைய மற்​றொரு இளைஞர் கொலை செய்​யப்​பட்டு எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல் கிடந்​தது.

தகவல் அறிந்து வந்த சேலம் சரக டிஐஜி சந்​தோஷ் ஹடிமணி, எஸ்பி தங்​கதுரை உள்ளிட்ட போலீஸார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து உடல்​களை கைப்​பற்றினர்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் கூறும்போது, கொலை​யானவர்​களின் உடல்​கள் 70 முதல் 80 சதவீதம் வரை எரிந்த நிலை​யில் உள்​ள​தால், கொலை​யான இளைஞர்​கள் யார் என்​பது உடனடி​யாக தெரிய​வில்​லை. வேறு இடத்​தில் இவர்​களைக் கொலை செய்து வாக​னத்​தில் உடல்​களை எடுத்து வந்து இப்​பகு​தி​யில் வைத்து எரித்​திருக்​கலாம். அண்டை மாநிலம், மாவட்​டங்​களில் காணா​மல் போனவர்​ விவரங்​கள் மற்​றும் உடல்​கள் மீட்​கப்​பட்ட சாலை​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்து விசா​ரணை நடக்கிறது” என்​றனர்.

மேலும், இதுதொடர்​பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீ​ஸார் 5 தனிப்​படைகள் அமைத்து குற்​ற​வாளி​களைத் தேடி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT