சுரேஷ், ஸ்ரீராம்​

 
க்ரைம்

தெலங்கானாவில் இருந்து கடத்தி வந்து சென்னையில்​ போதை மாத்திரை விற்பனை: இருவர்​ கைது

செய்திப்பிரிவு

சென்​னை: காவல்​ ஆணை​யர்​ உத்​தர​வின்​ பேரில்​, சென்​னை ​முழு​வது​ம்​ போதைப்பொருள்​ ஒழிப்​பு நட​வடிக்​கைகள்​ ​முடு​க்​கி​விடப்​பட்​டுள்​ளன. இதன்​ ஒரு பகு​தி​யாக, ​காவல்​ துணை ஆணை​யர்​களின்​ மேற்​பார்​வை​யில்​ அமை​க்​கப்​பட்​ட தனிப்​படை​யினர்​ தீ​விர கண்​காணிப்​பில்​ ஈடு​பட்​டு வரு​கின்​றனர்​.

அந்​த வகை​யில்​, சென்​னை ​ரா​மாபுரம்​ பகு​தி​யில்​ சட்​ட​விரோத​மாக ​போதை ​மாத்​திரைகள்​ ​விற்​பனை செய்​யப்​படு​வ​தாக ​போலீ​ஸாரு​க்​கு ரகசி​​யத்​ தகவல்​ கிடைத்​தது. அதன்​பேரில்​, நேற்​று ​முன்​தினம்​ ​ரா​மாபுரம்​ ​திரு​மலை நகர்​ பூங்​கா அரு​கே ​போலீ​ஸார்​ தீ​விர​மாகக்​ கண்​காணித்​தனர்​.

அப்​போது அங்​கு சந்​தேகத்​துக்​கிட​மான ​முறை​யில்​ நின்​று ​கொண்​டிருந்​த 2 இளைஞர்​களைப்​ பிடித்​து ​வி​சா​ரணை நடத்​தினர்​. ​வி​சா​ரணை​யில்​ அவர்​கள்​ ​முன்​னுக்​குப்​ பின்​ ​முரணாகப்​ ப​திலளித்​த​தால்​, ​போலீ​ஸார்​ அவர்​களின்​ உடைமை​களைச்​ சோதனை​யிட்​டனர்​.

அப்​போது அவர்​கள்​ ஏ​ராள​மான வலி நி​வாரண ​மாத்​திரைகளை மறைத்​து ​வைத்​திருந்​தது கண்​டறியப்​பட்​டது.

இதுகுறித்​து நடத்​தி​ய ​வி​சா​ரணை​யில்​, ஒரு​வர்​ மதுர​வாயலைச்​ சேர்​ந்​த தனி​யார்​ கல்​லூரி ​மாணவர்​ சுரேஷ் (23), மற்​றொரு​வர்​ ​ரா​மாபுரம்​ பகு​தி​யைச்​ சேர்​ந்​த ஸ்ரீராம்​ (19) என்​​பது​ம்​, இரு​வரு​ம்​ தெலங்​கா​னா ​மாநிலம்​, செகந்​தி​ரா​பாத்​திலிருந்​து இந்​த வலி நிவாரண ​மாத்​திரைகளை​க்​ குறைந்த​விலைக்​கு ​வாங்​கி வந்​து, சென்​னை​யில்​ சட்​ட​விரோதமாக விற்றது தெரிய​வந்​தது.

இதையடு​த்​து இரு​வரை​யும்​ கை​து செய்​த ​போலீ​ஸார்​, அவர்​களிட​மிருந்​து 1,380 வலி நி​வாரண ​மாத்​திரைகள்​ மற்​றும்​ ​விற்​பனைப்​ பண​மான ரூ.1.47 லட்​சம்​ ஆகிய​வற்​றை பறி​முதல்​ செய்​தனர்​. ​போதைப்​ பொருட்​கள்​ கடத்​தலில்​ பின்​னணி​யில்​ இருப்​பவர்​கள்​ குறித்​து ​போலீ​ஸார்​ தொடர்​ந்​து ​வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT